பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனநாயக சோஷலிசம் நேருவின் மிகப் பெரிய இந்தத் தங்கக் குண்டை மலையுச்சியில் ஏற்றுவதற்காகப் பலரும் முயன்றனர். பாதிவழியில் சரிந்து எல்லாரையும் உருட்டிக் கொண்டு கீழே வந்து விழுந்தது. சிலம்பின் இரண்டாவது வெற்றி! பத்மினி என்ற பெயரைக் கேட்டதும் பலாத்காரம் தான் நினைவுக்கு வருகிறது. சித்துர் ராணி பத்மினியை அல்லாவுதீன் கில்ஜி பலாத்காரம் செய்ய முயன்றது அன்றைய வரலாறு. சிதம்பரம் பத்மினியை அவள் கணவன் எதிரிலேயே காவல் துறையைச் சேர்ந்த மூவர் கதறக் கதறக் கற்பழித்தது இன்றைய வரலாறு. புணர்ச்சி ஒரு மென்மையான புனிதம். நான் நீயற்ற ஏகநிலை. பாமரர்க்கும் கவிஞர் முருகுசுந்தரம் 54