பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைக்கும் சாவுக் குஞ்சு! லிங்கன் காந்தி கென்னடி ஆகியோரின் சாவு விபத்துக்கள்! உன் சாவு வீர மரணம்! நீ கண்ணிரையே அமுதமாகக் கடைந்து தந்த மந்திர மலை! துருவங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கண்டத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு நீ ஒற்றைக்காலில் ஒடிக் கொண்டிருந்தபோது உன் உடம்பு சிந்திய குருதி, சேசு சிலுவையில் சிந்திய குருதியைவிடப் புனிதமானது. நீ ஒடிக் களைத்து உயிர்த்த பெருமூச்சு கார்க்கியின் 'அன்னை' கடைசியில் வெளிப்படுத்திய பெரு மூச்சைவிட ஆழமானது. முருகுசுந்தரம் கவிதைகள் 67