பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரையறுக்கப்படவில்லை; அல்லது போதுமான விவாதத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. இந்திய விடுதலைக்குப்பின் என்று ஒர் எல்லைக்குப் பிறகு பார்த்தாலும் ஏறத்தாழ அரை நூற்றாண்டு கழிந்துவிட்டது பல்கலைக்கழகங்கள் பட்டங்கள் வழங்குகின்றன. ஆய்வுகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும் இந்த நூற்றாண்டின் நவீனத்துவத்தை எதிர்கொள்ளும் தகுதிமிக்க காலத்துக்கு ஏற்றதான இலக்கியத் திசை வழிகளை, நாம்' தமிழில் இன்னும் தீர்மானித்துக் கொள்ளாமல்தான் இருக்கிறோம் என்றே தோன்றுகிறது. கவிதை என்பதும் செய்யுள் என்பதும் ஒன்றா? வெவ்வேறா? புதுக்கவிதை என்பதும் வசனகவிதை என்பதும் ஒன்றா? வெவ்வேறா? என்ற வினாக்கள் இன்னும் பரந்துபட்ட அளவில் ஆராயப்படவில்லை: ஒரு பொதுக்கருத்து எட்டப்படவில்லை. இலக்கிய வரலாற்றில் சில முக்கியமானதீர்மானங்களை எட்டுவதில் காலஅவகாசம் தேவைப்படும் என்பது நியாயமே. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தமட்டிலும் நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலேயே நீண்டகால அவகாசத்தை வீணடித்திருக்கிறோம். அல்லது அரையும் குறையுமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விவாதித்து முடிவெடுக்காமலேயே நேரத்தை நகர்த்தி வந்திருக்கிறோம். அல்லது வேண்டாத விவாதங்களை மேலே கிளப்பி வேடிக்கை பார்த்து iணாக்கியிருக்கிறோம். 4 தேவையான, தீர்மானிக்கப்பட வேண்டிய, விவாதங்களை, அறிவாளிகள் உரிய நேரத்தில் முன்னெடுத்துச் செல்லவில்லை என்பதற்காகக் காலம் சும்மா இருந்து விடுவதில்லை. அறிவாளிகள் சிறுபான்மையினர் என்பதும், இவர்களைத் தவிர்ந்த பாட்டாளி மக்கள் பெரும்பான்மையினர் என்பதும் அந்தப் பெரும்பான்மையினர் தம் வாழ்க்கைப் போக்கானது காலத்தை இயக்கும் ஆற்றல் பெற்றுள்ளது என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய உண்மைகளாகும். அந்தப் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் வெற்றிகள்-தோல்விகள் ஆகியவற்றை இலக்கியப்படுத்துதல் தான் 'நவீனத்துவம்' என்று புரிந்து கொண்டு செயலாற்றும் அறிவாளிகளும் இல்லாமல் இல்லை! அத்தகையோர் ஆங்காங்கே சிறிய சிறிய விவாதங்களையும் சாதனைகளையும் செய்துள்ளனர். தமிழகத்தில் ந. பிச்சமூர்த்தியிலிருந்து கவிஞர் பாலாவரையிலும், இலங்கையில் 'மஹாகவி யிலிருந்து நுஃமான் வரையிலும் சிறிய சிறிய விவாதங்களை முன் வைத்துள்ளனர். இங்கே சான்றுகளாகக் குறிப்பிடப்பட்டவர்களும் இவ்வெல்லைகளுக்கு உட்பட்டவர்களும் புரிந்து வந்துள்ள விவாதங்கள் கவிஞர் முருகுசுந்தரம் 72