பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனைகள் அனைத்தும் படைப்பிலக்கியங்கள் சாதாரண மக்களைப் பிரதிபலிப்பது எப்படி, சென்றடைவது எப்படி என்ப்திலேயே மிகவும் கவனமாக இருந்தன என்பது குறிப்பிடத்க்க செய்தியாகும். எனவே தான் யாப்பின் உறுப்புக்கள் என்று ந. பிச்சமூர்த்தி (குயிலின் சுருதி-முன்னுரை) அறிவித்தார். இலங்கையின் 'மஹாகவி செய்யுள் நடையை யதார்த்த பூர்வமான படைப்புக்குத் தேவையான முறையில், பேச்சோசைமிகுந்த நடையாக மாற்றி நாடகங்கள் படைத்தார். பேச்சோசைக்கும் பாட்டோசைக்கும் இடையேயுள்ள பேதத்தை உணர்ந்தால்தான் தமிழ்க் கவிதைகளில் நவீனத்தன்மை அதிகரிக்கும் என்று இ.முருகையன் எழுதினார். எம்.ஏ.நுஃமான்எழுதியுள்ள பாநாடகங்கள்-சில கருத்துக்கள், 'ஈழத்துப்பா நாடகங்கள் ஆகிய இரண்டு கட்டுரைகளும் எழுப்பும் விவாதங்களும் தந்துள்ள விளக்கங்களும் மிகவும் முக்கியமானவை. உலக அளவிலும், தமிழிலும் காலப்போக்கில் செய்யுள் நடை நாடகப் பயன்பாட்டுக்குக் கோட்பாட்டு ரீதியாக நிராகரிக்கப்பட்ட வரலாற்றை நுஃமான் மிகவும் விரிவாகச்சுட்டிக்காட்டுகிறார். செய்யுளின் தேவையை இப்சனைப் போல் முற்றாக நிராகரிக்கவும் வேண்டாம்: எலியட்டைப் போல் மிகைப்படுத்தி-வற்புறுத்தவும் வேண்டாம் என்று வாதிடும் நுஃமான், நாடகப் போக்கிற்கு ஒர் ஆழமான கவித்துவ வீச்சைத் தரக்கூடியது 'அளவான யாப்போசை' என்று தீர்மானிக்கிறார். நுஃமான் அளவான யாப்போசை என்ன என்பதை மஹாகவி'யின் பா நாடகங்கள் பற்றிய ஆய்வுரையில் தெளிவாக்குகிறார். 'பேச்சு வழக்குச் சார்ந்த செய்யுள் நடை' என்பது அவர் தரும் குறிப்பு. இத்தகைய பேச்சு வழக்குச் சார்ந்த பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிநடையில் இல்லாத காரணத்தினால்தான் பேராசிரியர் கந்தரனார் அளித்த மனோன்மணியம்' படிக்கப்படும் அளவிலேயே நின்றுபோய் விட்டது; மக்களிடம் சென்றடையவில்லை என்ற கருத்தும் இங்கே நினைப்பதற்குரியது. 'சிலப்பதிகாரமும், மனோன்மணியமும், கலாவதியும் நாடகங்கள் என்று கூற நான் தயாராக இல்லை' என்று கோமல்சுவாமிநாதன் மறுப்பதற்கும் கூடக் காரணம் இவை மேற்கொண்டுள்ள மக்களை நெருங்கி வராத, அந்நியமான நடை என்றே கொள்ளலாம். எனவே மக்களுக்கான நாடகம், மேடையேற்றி நடிக்கப்படுவதற்கான நாடகம் என்று வரும்போது நாடகத்தின் ஊடகம்' எப்படி அமைய வேண்டும் என்னும் விவாதம் மிக முக்கியம் பெற்று விடுகிறது. 5 'எதிர்காலத் தமிழ்க் கவிதை' என்னும் என் நூலில் நானும் சில விவாதங்களை எழுப்பியிருக்கிறேன். இன்று தமிழில் கிளைத்துத் முருகுசுந்தரம் கவிதைகள் 73