பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழைத்திருக்கும் புதுக்கவிதைகள் என்பவையும் வசன கவிதைகள் என்பவையும் வேறு வேறானவை என்பதைச்சுட்டிக் காட்டியிருக்கிறேன். புதுக் கவிதை' என்பது முழுவதுமாய் யாப்பமைதி-ஒசை அமைப்பு ஆகியவற்றிலிருந்து வெட்டிக் கொண்டு, விடுபட்டு அமைவது அல்ல; சட்டையைக் கழற்றுவதுபோல் பாவனை செய்து, உதறி, மறுபடியும் அணிந்து கொள்ளும் காரியமே புதுக்கவிதை'யில் நிகழ்ந்துள்ளது. புதுக்கவிதை என்று இனம் பிரித்து எடுத்துக்கொள்ளத்தக்க பல கவிதைகள் தமிழின் பாவகைகளுக்குள்ளேயும், இனங்களுக்குள்ளேயும் வெகு லாவகமாக.அடங்கிவிடும் விசித்திரங்கள்கண்டுகொள்ளக்கூடியவையே. வசனகவிதை அப்படியல்ல, கவித்துவம் பொருந்தியவசனமே வசனகவிதை; ஆங்கிலத்தில் Prose Poem எனப்படுகிறது. நுட்பமான உணர்ச்சியும், சொல்லில் கவிதை வெளிச்சமும் இருப்பது போதும்; வசனத்தின் உருவத்தையும் கவிதையின் உள்ளடக்கத்தையும் கொண்டு பிறப்பதே வசனகவிதை' என்று என். ஆர். தாசன் குறிப்பிட்டு வரையறை செய்வதை இங்கே நினைவு படுத்திக் கொள்ளலாம். உபநிடதங்களின் வசனகவிதைத் தன்மையும் நாடகபாணி உரையாடல் போக்கிலான நேர் முகத்தன்மையும் மகாகவிகளான தாகூரையும், பாரதியையும் மிக ஆழமாகப் பாதித்தன என்பது நினைப்பதற்குரியவை. தாகூரின் கீதாஞ்சலியில்அமைந்துள்ளநேர்முகத் தன்மையும், பாரதியின் வசனகவிதைகளில் அமைந்துள்ள நேர்முகத் தன்மையும் வசனகவிதை அமைப்பின் வெற்றிக்கு மிகச் சிறந்த உதாரணங்கள் எனலாம். மேலை நாட்டு உதாரணங்களாக மில்ட்டனும், சேக்ஸ்பியரும் வால்ட்விட்மனும் வருகிறார்கள். சோவியத் நாட்டின் மாயகாவ்ஸ்கியும் இந்த வரிசையில் நினைக்கப்பட வேண்டியவர். இவர்கள் மேற்கொண்ட ஊடகம் நாம் விவாதிக்கும் வசனகவிதை (Prose Poem) poll_3;LDIreggbagi: Blank Verse. Free Verse argårl 1656, um Grairip, தீர்மானிப்பதில் சிக்கல்கள், தயக்கங்கள் இருக்கலாம். ஆனால் இவர்கள் செய்யுள் கவிஞர்களாக இல்லை என்பதும், அதன் காரணத்தினாலேயே மக்களை நெருங்கி வந்தனர் என்பதும் கவனத்துக்கு உரிய விஷயங்கள்ஆகும். மாயகாவ்ஸ்கியின்கவிதையைப் புதிய பாணிக் கவிதை-என்று குறிப்பிடும் தொ.மு.சி.ரகுநாதன், புதியபாணிக்கவிதை' நேர்முகமாக வாசகரோடு பேசும் தன்மை பெற்றுள்ளது. அதனாலேயே கேட்பவரின் இதயத்தில் நேரடியாகவே வந்து தைக்கும் வலிமையைப் பெற்று விடுகிறது என்று (லெனின் கவிதாஞ்சலி - முன்னுரை) சுட்டிக்காட்டுகிறார். மக்களுக்காகத்தான் இலக்கியம்-கவிதை என்றால், அந்த இலக்கியத்தை கவிதையை எளிமை செய்து பெரும்பான்மை மக்களின் அருகாமையில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சி வந்துள்ளது. அந்த முயற்சிதான் கவிதையையும் செய்யுளையும் கவிஞர் முருகுசுந்தரம் 74