பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதித்து விட்டோமோ என்று அச்சப்படுகிறாய்! அல்லவா பெண்ணே! (அச்சத்தால், அவள் பிடித்திருந்த தேநீர்க் கோப்பை நடுங்குகிறது.) பெண்: இல்லை... நீங்கள்... நெடுமுடி: நெடு முடி. முழுப்பெயர் நெடு முடிக் காலிங்கராயன்! காவல் துறையில் பணிபுரிகின்றேன். பெண்: உங்கள்... நெடுமுடி: ஊரா? இந்திய அரசின் அடிமரம் ஆணிவேர்! செந்தமிழ் மாநிலம். அழகின் மேய்ச்சல்தரை! பெண்: நான்... அம்ரிதா முழுப்பெயர் அம்ரிதா கெளர். நெடுமுடி: ஒகோ... (உதட்டில் மெல்லிய புன்னகை) பெண்: என் தாயும் தந்தையும் குண்டுக்கு இரையாகி விட்டனர். தமையன்... என் கண்ணெதிரில் முருகுசுந்தரம் கவிதைகள்