பக்கம்:முல்லை கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அனைத்துக் குலுக்கி அதன் அழுகையை அடக்க முயன்றான். ஆசைப் பெருக்கில் அர்த்தமற்ற சப்தங்கள் அவன் வாயினின்று பிறந்தன. ஆயினும் குழந்தையைத் தேற்ற அவை வகையற்றுப் போயின. அதன் கத்தல் இன்னமும் அதிகரித்தது. w 'என்ன தாயில்லாக் குளந்தையா?” அவனுக்குத் தாக்கி வாரிப்போட்டது. ஏற்கெனவே உள்ளூர வேதனை பட்டுக்கொண்டிருக்கிறான் : "காலை யில் வேலை பார்க்கப்போன பெண்பிள்ளை சூரியன் உச்சிக்குப் போயிட்டுது. இன்னமும் திரும்பியபாடில்லை. இந்தப் பட்டணத்திலே ஊருக்குப் புதுசு. ஆண் புள்ளைக்கே-இத்தனை மோட்டார் வண்டிக்கும் டிராம் வண்டிக்கும் சடுக்கா வண்டிக்கும் ரிக்ஷா வண்டிக்கும் நடுவிலே ஆளைப் பம்பரம் சுத்திவிட்டாற்போலே இருக் கிறது, அவளை எது வாரி வாயிலே போட்டுக்குதோ: யார் இந்த ஆள் அவ சகுனி மாதிரி?...' அந்த ஆள் எதிர்த் திண்ணையிலே உட்கார்ந்து கொண்டு ஒரு துண்டு பீடியைப் பிடித்துக்கொண்டிருந் தான். அவன் முகத்தைப் பார்த்து வயதையோ அந்தஸ் தையோ நிர்ணயிப்பதற்கில்லை. கால்மேல் காலை மடித்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு வெகு ஆத்திரத்துடன் பீடியைக் குடித்துக் கொண்டிருந்தான். . 'இல்லே காலையிலே போனா-இன்னும் வரல்லே -குளந்தை வவுத்திலே ஒண்ணுமில்லே' . . . - 'யார் வவுத்திலே தாணய்யா இப்போ என்ன இருக்குது? எரிச்சல்தானிருக்குது. ஊருக்குப் புதிசா? ஏதேனும் வேண்டுதலையா?” . இல்லே பட்டணத்துக்குப் புளைக்க வந்தோம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/116&oldid=881452" இலிருந்து மீள்விக்கப்பட்டது