இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
I5 மாட்சிமைதங்கிய மன்னனின் சட்டப்படி நான் அவனைக் கழுவிலேற்றிக் கொல்லும்படி தீர்ப்புக் கூறினேன். தீர்ப்பெழுதிய பேனாவைத் தீயிலிட்டுக் கொளுத் தினேன். அதைத் தொட்டெழுதிய என் விரல்களைத் தண்ணிர் விட்டுக் கழுவினேன். ஆனால் என் மனதைக் கழுவ என்னால் முடிய வில்லை. அவன் என் மீது சாட்டிய குற்றம் உண்மையே என்று என்மனம் கூறுகிறது.