பக்கம்:முல்லை கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 என்னை நிலைகொள்ளவிடாமல் அலட்டின. எனினும் கண்ணிர் சிந்தவோ வாய்விட்டு அழுது நெஞ்சின் பளுவைக் குறைக்கவோ மனசில் தெம்பும் திறனும் இல்லை. காரணம் அன்றைய போர். ஒரு புறம் கர்ணன், என் காதலன்; மறுபுறம் அர்ஜுனன், என் கணவன். இருவரும் போர்புரிகிறார்கள் இருவரில் யார் விழுவார்கள்? அவர் கள் வீழ்ச்சியைப் பொறுத்துத்தான் என் வாழ்க்கையும் இருக்கிறது-இப்படியெல்லாம் நெஞ்சக் குகையில் எண்ணங்கள் வெந்து கொண்டிருந்தன. தூரத்தில் சங்கும் தாரையும் பயங்கரமாக ஒலித்தன கிழிபட்டு வழிவிடும் காற்றில் வேகங்குறையாது ஹாங் காரிக்கும் அஸ்திரங்களின் ஓசையும் கேட்டது எனினும் காது மரத்துவிடவில்லை. - திடீரென்று அப்பா, மகனே' என்று அலறும் சப்தம் காதில் விழுந்தது- அதுவும் எங்கள் அரண்மனையி லிருந்து! - மாடத்திலிருந்துக் கீழே குனிந்து பார்த்தேன். குந்தி தேவி தலைவிரிகோலமாய் அப்பா மகனே, என்று கதறிக் கொண்டு ஓடினார். அந்த பரிதாபக் குரல் என் நெஞ்சில் பாய்ந்து அழுந்தியது. மகன்!- அர்ஜுன மகாராஜா தான் இறந்துவிட்டார் என்று மனசில் பட்டது. உடனேயே மனைவி என்ற பாந்தம் மனசைக் கொந்திற்று. குபிலென அழ நினைத்தேன். ஆனால் திறனில்லை. ஒன்றும் புரியா மல் நின்றேன். கணத்துக்குள் மாடமே நிலைபெயர்ந்து தாழ்வதாக உணர்ந்தேன். அவ்வளவு மயக்கம். மாடத்தை விட்டு இறங்கிக்களத்தை நேரில் காண எண்ணினேன். இறங்கினேன். ஒடினேன். ஆனால் வழியில் எதிர்ப்பட்ட தாதி என்னைத் தடுத்து நிறுத்தினாள் 'அம்மா, எங்கு ஒடுகிறீர்கள்?" களத்திற்கு' என்றேன் நிர்விசாரமாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/98&oldid=881672" இலிருந்து மீள்விக்கப்பட்டது