48
இன்றியமையாத சிறப்புடையது. ஆனால், உணவிற்கு அன்றித் தனியே தூவிப் பயன்படுத்தும்போது அது பலிப்பொருள் வெள்ளரிசி பலிப்பொருள் என்பதை,
"தூய்மையான வெள்ளை அரிசியைப் பலிப் பொருளாகத் தூவினர்" - எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. வெள்ளரிசி தனியாக. மட்டும் அன்றி ஆட்டுக் குருதி கலக்கப்பட்டும் பலிப்பொரு ளாகும். அது வெறியாட்டுக்கு உரிய பலிப்பொருள். இக் கருத்தை, -
- "ஆட்டுக் குருதியுடன் கலந்த தூய்மையான வெள்ளை அரிசியை வெறியாட்டின்போது சிறு பலியாகச் செய்தனர்" !
- எனத் திருமுருகாற்றும்
படையிலும் பிற இலக்கியங்களிலும் காண்கின்ருேம்.
வெள்ளரிசி பலிப்பொருளாவது போன்று அரிசியில் சமைக்கப்பட்ட சோறும் பலிப்பொருளாயிற்று. -
- "காவல் மன்னர் கடைமுகத் துடுக்கும்
போகுபலி வெண்சோறு போல" - என்று உறையூர் முதுகூத்தனர் பாடல் அறிவிக்கின்றது. இங்கும் சோறு: "வெண்சோறு" என்று குறிக்கப்பட்டுள்ளதும் நோக்க த் தக்கது. -
"வாலரிசிப் பலிசிதறி" - பட்டினப்பாலே : 165. "குருதியொடு கலந்த தூவெள் ளரிசி சில்பலி செய்து" -திருமுருகாற்றுப்படை : 258, 234, * "நெல்லும் பொரியும் சில்பலி யரிசியும் - . .
யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை"
- - - மணிமேகலை 6 : 95, 96