பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

முள்வேலிகள்



எங்கே எந்த வீட்டில் விபசாரம் நடக்கும், யார் எங்கே கள்ளச் சாராயம் காய்ச்சுவார்கள், யார் எங்கே மஸாஜ் பார்லர் என்ற பெயரில் தசை வியாபாரம் செய்வார்கள் என்றெல்லாம் தெரியாமல் அவற்றிற்கு நடுவே அல்லது அவற்றிற்கு மிகமிக அருகிலேயே ஒரு கெளரவமான குடும்பஸ்தன் குடியேறிவிடும் அபாயம் நகர வாழ்வில் இருக் கிறது. எங்கள் அய்யப்பன் நகர் காலனியில் ஒரு அஸோஸியேஷன் இருக்கிற து. இதன் காரியதரிசியாகக் கொஞ்ச நாள் நான் இருந்தேன். அப்போது இந்தக் காலனிக்குப் பெயர் எதுவும் வைக்கப்படவில்லை. வெறும் ஹவுஸிங் யூனிட் எக்ஸ்டென்ஷன் நெம்பர் 64 என்று மட்டும் தான் இருந்தது. இதற்குக் கற்பின் பெருமையும், நல்லொழுக்கத்தின் சிறப்பையும் வற்புறுத்துகிறாற் போலக் கண்ணகி நகர் என்று பெயர் வைக்கவேண்டும் என்பதாக என் நண்பரும் காலனிவாசியுமான புலவர் மகிழ்மாறன் அபிப்ராயப்பட்டார்.

உடனே நான் அதிர்ச்சியடையத் தக்க விதத்தில் என்னுடைய இரு பக்கத்து அண்டை வீட்டார்களாகிய இஞ்சிக்குடி பாகவதரும், செக்ஸ் அணுகுண்டு நந்தினியின் தாயாகிய அம்மிணி அம்மாவும் அதை ஆட்சேபித்தார்கள். என்னடா கற்பு கண்ணகி ஒழுக்கம் என்கிற மாதிரிப் பெயர் களைக் கேட்டாலே இந்த இருபக்கத்து வீட்டாருமே எரிச்ச லடைகிறார்களே என்று நான்கூட ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தேன். என்னுடைய பக்கத்து வீட்டார்களைப் பற்றி நான் புரிந்து கொண்டு அதிர்ச்சியும், திகைப்பும் அடைய இந்தச் சந்தர்ப்பம் எனக்கு உதவியது என்றுதான் சொல்ல வேண்டும். . . . . .

இன்னெரு சமயம் இரவு பன்னிரண்டு மணி இருக்கும். யாரோ என் வீட்டு வாசற்கதவைத் தட்டினார்கள். போய்த் திறந்தால் குடிவெறியோடு தள்ளாடும் ஓர் ஆள் வாயில் புகையும் சிகரெட்டுடன் அந்த டான்ஸ் காரிங்க வீடு இது