பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

முள்வேலிகள்



யில் பிரசுரமான புகைப்படத்தைக் காட்டிக் கூப்பாடு போட்டான் கண்ணன்.

இதெல்லாம் என்ன கூத்து?"

எனக்கு எதுவும் தெரியாதுங்க. ரொம்ப நாளேக்கு முன்னாடி இப்பிடி ரெண்டு வீட்டுக்கும் சண்டை எல்லாம் வர்ரத்துக்கு முன்னாலே மாலா பாலா சிங்கப்பூர்லேருந்து வாங்கிட்டு வந்த புதுக்காமிராவிலே என்னையும் நந்தினியையும் பிடிச்ச படம் இது. அது மட்டும்தான் இப்ப ஞாபகம் இருக்கு. இதை அவங்க வீட்டிலேருந்துதான் இந்தப் பேப்பர்க்காரன் வாங்கிக்கிட்டிருக்கணும். சத்தியமா எனக்கு வேற எதுவும் தெரியாது...'

இந்தப் பத்திரிகையிலே வந்திருக்கிற பேட்டியைப் பற்றி...' - .

என்ன பேட்டி? யாரோட பேட்டி?’’

அதான் உன்னோட ஃப்ரண்ட் நந்தினியோட பேட்டி.." - -

அவ பேட்டி குடுத்திருக்காளா என்ன? என்னன்னு குடுத்திருக்கா?" - -

நீ ரொம்பத் தங்கமானவளாம். உன் பொண் கலா ஸ்வீட் கேர்ளாம். நான்தான் கோபக்காரனாம், கொடுமைக்காரனாம், ஸினிக்காம்.' ..!

. *அப்படீன்னு யார் சொல்றாங்க?"

வேற யாரு? எல்லாம் உன் சினேகிதி நந்தினிதான்.

" அடப் பாவமே ஏன் அப்பிடிச் சொன்னா?"

சொல்லியிருக்காளே! எல்லாம் நீ எனக்குத் தெரியாமே அவளோடவும் அந்தக் குடும்பத்தோடவும் பழகறதாலே வந்தவினை. அங்கே வீடியோ பார்க்கப் போறே. அந்த நந்தினி மாதிரி ஒரு மட்டமான அரை நிர்வான ஆபாச