பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

சுலட்சணா காதலிக்கிறாள்


சாதுரியமும் (கையா) டல் வல்லான்பிள்ளை போன்றவர்களிடம் இருந்தது. இதைப் பற்றிய புகார்கள் கிடைத்ததன் பேரில் யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் கூட உதயா பல்கலைக்கழகத்தை எச்சரித்திருந்தது.

ஆனால் பெரும் பண வசதியும் மத்திய மாநில ஆளும் கட்சிகளில் செல்வாக்கும் கொண்டிருந்த உதயா பல்கலைக் கழகப் புரோ-சான்ஸ்லர் இதற்கெல்லாம் ஒரு சிறிதும் அஞ்சவில்லை. வழக்கம்போல் நிர்வாகம் மாணவர்களேக் கொண்டே காம்பஸு க்குள் புல்பிடுங்கவும், புதர் வெட்டவும், களை வெட்டவும் தூண்டி அதையே சோஷல் செர்வீஸக ஆக்கி மார்க் போட்டு வந்தது. இதில் பச்சை மோசடிதான் நடந்து வந்தது.

உண்மையாகவே சோஷியல் செர்வீஸ் செய்ய விரும்பிய சுலட்சணா போன்றவர்கள் வேறு ஏற்பாடு செய்ய வேண்டிய தாயிற்று. அவள் யாராலும் கவனிக்கப்படாத- மெயின் ரோடிலிருந்து உள் விலகி இருந்த-ஒர் அரிஜன கிராமத்துக்குச் சாலை போட உழைக்க முன்வருமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவளுடைய வேண்டு கோளுக்கு மாணவ மாணவிகளிடையே நல்ல ஆர்வத்தோடு கூடிய வரவேற்பு இருந்தது. போட்டி போட்டுக்கொண்டு அவளிடம் மாணவர்கள் முன் வந்து பேர் கொடுத் திருந்தார்கள்.

இத்தனைக்கும் பல்கலைக்கழக டீனும் ஆக்டிங் வி. சி. யு. மான (கையா) டல் வல்லான் பிள்ளையிடமிருந்து சுலட்சணா அன் அஃபீஷியலாக ஆர்கனஸ் செய்யும் இந்த சோஷியல் செர்வீஸ் ஏற்பாட்டை டிஸ்கரேஜ் செய்வது போல ஒரு சுற்றறிக்கை வேறு வந்து பல்கலைக்கழக நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டப்பட்டு விட்டது.

"பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக நடத்தும் சோஷல் செர்வீஸ் பணிகள் முடிந்து இந்த ஆண்டிற்கான மதிப்பெண்களும் போடப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகம் நடத்தாமல்