பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

முள்வேலிகள்


இப்போது காலனியில் முன்பிருந்ததை விட வீடுகள் அதிகமாகி விட்டன. பக்கத்து வீட்டுப் பாகவதர்கூடவந்து குடியேறி விட்டார். காலனி நலன் நாடுவோர் சங்கத்தில் உறுப்பினர்களும் அதிகமாகி இருந்தனர். மறுபடியும் ஒரு நாள் பழைய திரையுலக நண்பன் கண்ணனைத் தேடி வந்தான். பக்கத்து வீட்டு அம்மிணி அம்மாவைப் பற்றி மேலும் ஒரு கூடை வம்புகளையும், வதந்திகளையும் புதிதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றான்.

"ஹை சர்க்கிள்லே வழுக்கைத் தலைகளுக்கு நடுவே நடக்கிற கிளப் பார்ட்டிகளிலே எண்டர்டெயின் பண்ணப் போறாளுவ. அதுலே வருமானம் பயங்கரமா இருக்கும்."

"வீட்டைப் பார்த்தாலே தெரியுதேப்பா! ஒரே வருஷத்திலே மாடி... தோட்டம், கார் டெலிபோன்... இதெல்லாம் சும்மா வந்துட முடியுமா?" ... . . . . . . .

"தொழிலதிபர்கள், வியாபாரிகளோட இரகசிய கிளப் பார்ட்டியிலே நிர்வாணமா டிரிங்ஸ் ஸெர்வ் பண்ணினா வருமானம் வராதா பின்னே?

'வருமானம் இருந்தா ஏங்கேயும் எதுவும் நடக்குதுப்பா! இந்த மாதிரி ஒரு வீடு எங்க காலனி வெல்ஃபேர் அஸோஸியேஷன்ல மெம்பராகப் பிடாதுன்னு என்னாலே ஆனமட்டும் தடுத்துப் பார்த்தேன். முடியலே. பணத்தை வாங்கிட்டு யாரோ அம்மிணி அம்மாவையும் மெம்பராக்கி விட்டாச்சு நான் எத்தனை தடுத்தும் யாரும் கேட்க மாட்டேன்னுட்டாங்க, போ!' - -

"அம்மிணி அம்மாவோட வண்டவாளம் தெரிஞ்சா அப்புறம் தயங்குவாங்க. வேற ஆட்களை வெச்சு இவமூலமா ரெண்டு மாஸாஜ் பார்லர் கூட நடக்குது. அத்தனையும் காசு. நாய் வித்தகாசு குரைக்கவா போகுது? அம்மிணி படு கெட்டிக்காரி,"