பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

முள் வேலிகள்

அம்மிணி இந்த வயசிலேயும் லட்சுமீகரமா இருக்கா. நல்ல ரசிகை, சின்ன வயசிலே மலையாள இலக்கியமும் சம்ஸ்கிருதமும் நிறையப் படிச்சிருக்கா. அவ பொண்கள்லே ரெண்டு டான்ஸ் ஆடறது. மத்தது நடிக்கிறதுங்கரு...ஒண்ணு ரொம்ப ரொம்பக் கவர்ச்சி நடிப்பெல்லாம் நடிச்சு 'ஸெக்ஸ் பாம்’னு கூடப் பேர் வாங்கியிருக்காம். ஆனா என் பழக்கம் வேற லெவல்னு நீங்க புரிஞ்சுக்கணும். மோர் ஆர் லெஸ் என்னுது ஒருவிதமான இண்டெலக்சுவல் கம்பானியன்ஷிப். இதுலே உடம்பைச் சம்பந்தப்படுத்தி எழுதறது. கயவாளித் தனம் அல்லது பிளாக் மெயில்னே சொல்லுவேன். ரைஸிங் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் மானேஜிங் டைரக்டர் சிதம்பரம், அவரோடவீட்டிலே மஹிஷாசுரமர்த்தனி ஸ்லோகம் சொல்லி பூஜைக்கு அழைச்சா நான் போயிட்டுப் பூஜையைப் பண்ணிச் சம்பாவனை வாங்கிண்டு வரனோ இல்லையா? அவரோ மற்ற ஊழல், ஒழுக்கமின்மை, ஆபீஸ் லெளகீகம், இதை எல்லாம் நான் பார்த்துத் தயங்கறதில்லையே? அதைப்போல அம்மிணி அம்மா பயபக்தியோட நாராயணீயம் சொல்ல அழைச்சாலும் போறேன். மத்ததைப் பத்தி யோசிச்சுத் தயங்கலே...இதை மட்டும் ஏன் இப்பிடிக் கொச்சைப் படுத்தறான்னு தான் தெரியலே..."

"உங்கதர்க்கத்திலே நியாயம் இருக்குப் பாகவதர்வாள்."

"ஏன், நியாயமில்லேன்னுதான் சொல்லிப் பாருங்களேன்! அதுக்காக நான் கவலைப்படவோ, பயப்படவோ போறதில்லை. ஐயாம் திக் ஸ்கின்ட்."

தன்னிடம் பாகவதர் கொஞ்சம் ஆத்திரத்துடனேயே பேசுவது கண்ணனுக்குப் புரிந்தது. அதைவிடப் பெரிய வியப்பு அவர் இந்த மாதிரிப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படாதவராக இருந்ததுதான். மிகவும் திடமாகவும் உறுதியாகவும் இருந்தார்.

உங்க நண்பர் கிட்டச் சொல்லுங்கோ பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாதுன்னு.'