இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31
துருக்கம் | — | செல்லுதற்கரிய இடம், காடு, மலையரசன் |
துருக்கம் | — | கஸ்துாரி, குங்குமம் |
துருக்க வேம்பு | — | மலை வேம்பு |
துருக்கற்பொடி | — | செம்பிளைக் கற்பொடி |
துருக்கமாலை | — | குங்கும மலர்மாலை |
துருக்கத்தலை | — | கரு நிறமுள்ள கடல் மீன் வகை |
துலுக்கி | — | சிங்காரி |
துலுக்கடுவன் | — | ஒருவகை நெல் |
துலுக்கப்பூ | — | துலுக்கச் செவ்வந்தி |
துலுக்க மல்லிகை | — | பிள்ளையார் பூ என வழங்கப்படும் மலர், செடி |
துலுக்க பசளை | — | கீரை வகை |
துலுக்க பயறு | — | பயறு வகை |
துலுக்க கற்றாழை | — | கரிய பவளம் (நாட்டு மருந்து) |
மற்றும், “துருக்கர்நாடு” என்ற நிலக்கூறு இருந்ததை பதின்மூன்றாவது நூற்றாண்டு இலக்கிய கர்த்தாவான பரஞ்சோதி முனிவர், தமது திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிட்டுள்ளதும்[1] இங்குபொருத்தமுடையதாக உள்ளது. மற்றும், தமிழில், ஷர்பத், சிப்பாய், மணங்கு, தர்பார், தைக்கா வக்கீல், அமீர், உலமா, காஜி, ஜாகிர், ஜமீன்தார் போன்ற துருக்கி மொழிச் சொற்களும், தமிழ்ச் சொற்களாக வழக்கிற்கு வந்துள்ளன.
- ↑ பரஞ்சோதிமுனிவர் – திருவிளையாடற்புராணம்–மாணிக்கம்விற்ற படலம். பாடல் : எண் 65.