பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


6

மரக்காயர்


தமிழக இஸ்லாமியர்களில் இன்னொரு பிரிவினர் மரக்கலராயர் என்ற மரைக்காயர்கள். பதினைந்தாம் நூற்றாண்டில், போர்ச்சுகல் நாட்டு பரங்கிகளது கடல் வலிமையினால் அரபிக் கடல் வழி பாதிக்கப்பட்டு கொள்ளையர் வழியாக மாறியது. அரபிக்குடா நாடுகளில் நிலவிய பலமற்ற அரசியல், அரபுகளது வெளிநாட்டு வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவர்கள் தமிழகத்தில் குடியேறி, தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு பகுதியாக நிரந்தரமாக தமிழ் மண்ணில் நிலை கொள்வதற்கான நிர்பந்தத்தை ஊக்குவித்தது. இதனால், போர்ச்சுகீஸியருடன் போரிட்டும் அவர்களது கீழை நாட்டு வணிகத்தில் போட்டியிட முடியாத தமிழக இஸ்லாமியர் கடலோர உள்நாட்டு வாணிபத்தில் கவனத்தைச் செலுத்தினர். அத்துடன், அண்மை நாடுகளான வங்காளம் இலங்கை, பர்மா, ஆகிய நாடுகளுடன் அரிசி, தேக்குமரம், கைத்தறித்துணி, ஆடு மாடுகள், ஆகியவைகளைத் தங்கள் மரக்கலங்களில் எடுத்துச் சென்றுவிற்றனர். மேலும், அவர்கள் மேற்கொண்டு இருந்த பல்வகைப்பட்ட தொழிலைக் கீழ்க்கண்ட பழம் பாடல்[1] விவரிக்கின்றது.

"நீரோட்டஞ் சங்கெடுத்தல். நித்தில சலாப,
நீந்தி நீர்க் குளித்தல், வலையின் மீன் இழுத்தல்
பார் நீட்ட மறிதல், மீன் உலத்தல், மீன் விற்றல்,
பாறு முதற்பி ளோப்பல், வெளிருப்புப் படுத்தல்,
காரோட்டங் காணல், மீன் கோட் பறையோடத்தி
கண்டை கோட்டல், வலை பாட்டு கழற ம்பியோட்டல்
சூழ் காட்டல், பிறர்தேசம் புகுதல் .... .... ...".



  1. பிரபந்த திரட்டு (1982) பாடல் எண் 351