பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் 101

வாயடைக்கச் செய்த விதம் திருவை மகலக்கச் செய்திருந் தது. நீண்ட காலத்துக்கு அவன் அதை மறக்கவில்லை.

அவன் இயக்க வேலைகளாக அலைந்து அடுத்து விர இருக்கும் பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்ட ஊரூராக நாடகங்களும், கூட்டங்களும் போட்டுக் கொண்டிருந்த போது ஒர் இரவு செங்கல்பட்டில் நாடகம் முடிந்து இரவு இரண்டு மணிக்குக் காரில் சென்னை திரும்பினான். அவன் வழக்கமாக இரவு போய்த் தங்கும் இரண்டு மூன்று வீடுகளில் மிகவும் இளம் வாளிப்பான ஒரு நடிகை யின் வீட்டுக்கு எப்போதும் போல் அன்றும் போனான். அந்த நடிகையை ஹைதராபாத்திலிருந்து சென்னைக்குக் குடியேறச் செய்து வீடுவாங்கிக் கொடுத்து இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடிக்கிவைத்து முன்னேற்றி யதே அவன்தான். ஏறக்குறையத் தன்னோடு மட்டும் தான் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று இவன் அவளைப் பற்றி நம்பிக் கொண்டிருந்தான்,

ஆனால் அன்று செங்கல்பட்டில் இயக்க நாடகம் முடிந்து அவன் அவள் வீட்டிற்குச் சென்ற போது இவனுக் குப் போட்டியாக முளைத்திருந்த வேறொரு பணக்காரத் தயாரிப்பாளர் டைரக்டரின் கார் அங்கே அவள் விட்டு போர்டிகோவில் நின்று கொண்டிருந்தது. இரத்தம் கொதித்தது இவனுக்கு. அந்த நடிகை தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக இ பன் எண்ணினான். திான் இப்படித் துரோகங்களைத் தன்னையே நம்பிவந்த சண்பகம் தொடங்கி எத்தனையோ பெண்களுக்குச் செய்திருப்பது அப்போது அவனுக்கு நினைவு வரவில்லை. அந்தத் தயாரிப்பாளர் வந்து போனது பற்றி அலட்டிக் கொள்ளr மல், அவர் போன பின் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து இவன் வந்திருந்தால் ஒருவேளை இவனையும் சிரித்துக் கொண்டே அவள் வரவேற்றிருக்கக் கூடும்தான். ஆனால் திருமலைக்கு இப்போது வெறி மூண்டு விட்டது. தான் తీస్గోలో అత அதே வேளையில் தன்னிடம் பழகும் - மூ