பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀岛盘 。 நா. பார்த்தசாரதி

இதற்கு முந்தைய அமைச்சர்களைப் போல் கடவுள்ன் மேல் ஆணையிட்டுப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளா மல் தமிழ்த் தாயின் மேல் ஆணையிட்டு, மனச்சாட்சியின் பெயரால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள் இவர்கள்.

இதற்குள்ளேயே "நாளையிலிருந்து தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி தெருத் தெருவாகக் குவித்து. விற்கப்படும். தமிழக வீதிகளில் பாலும், தேனும் பெருக் கெடுத்து ஒடப் போகிறது. மூன்றுபடி லட்சியம் என்றார் கள். முடியாவிட்டால் ஒரு படி நிச்சயம் முந்துங்கள்! முந்துங்கள் காணத் தவறாதீர்கள், கதை-பேரறிஞர் பெருந்தகை-வசனம், பாடல்கள் சீர்திருத்தச் சிங்கம் திரு மைையரசன்’’-ான்று தேசற்ற கட்சியினர் கிண்டலாக மேடைகளில் பேசவும், சுவர்களில் எழுதவும் ஆரம்பித் திருந்தனர். பொருளாதாரப் பிரக்ஞையில்லாத அரசியல் வாக்குறுதிகளும், உணர்ச்சிகரமான தேர்தல் உறுதிமொழி களும் பின்னால் எவ்வளவு வம்பை உண்டாக்கும் என்பது அண்ணனுக்கே இப்போது தான் புரிந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் முச்சந்தியில் என்னை நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்'-என்று மேடையில் முழங்கப் போக இன்று சுவர்களில் முச்சந்தி இங்கே! சவுக்கும் இங்கே! மூன்றுப்டி எங்கே?' என்று எழுத ஆரம் பித்திருந்தார்கள். எழிலிருப்பு டி.பி. யில் முன்பு தனக்கு மறுக்கப்பட்ட அதே ஏ. சி. அறையில் திருமலை இன்று அமைச்சர் அந்தஸ்துடன் தனக்கு வேண்டிய பழகிய ஒரு பெண்ணுடன் தங்கப் போக இப்போது அவன் அமைச்ச ராகையினால் அது இரசாபாசமாகிவிட்டது. எதிர்க் கட்சிப் பத்திரிகைகள்- மந்திரியா மதன காமராஜனா?” என்று தலைப்புப் போட்டு எழிலிருப்பு டி. பி. ஏ. சி. அறை அழகி யார் என்ற ஆய்வில் இறங்கின. முதல் முறையாகத் தந்தை முன்பு செய்தது போல். அண்ணனும் இன்று அவனைக் கூப்பிட்டுக் கடுமையாகக் கண்டித்தார்.