பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 盘6莎

பதவி ஏற்றிருந்தார். அன்று காலையில் தான் அந்தப்புது: மந்திரிக்கு ராஜ்பவனில் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து. வைத்திருந்தார். அந்தச் செய்தி வெளியான மாலை தின. சரியுடன் தான் கன்னையா திருவைச் சந்திக்க வந்திருந்: தான். டாக்டர்களோ, நர்ஸோ அருகிலிருந்ததால், 'மனத்தையும், உடல்நிலையையும் பாதிக்கக்கூடிய இந்தத், தகவலை அப்போது திருவுக்குத் தெரிய விடக் கூடாது" என்று கன்னையனைத் தடுத்திருப்பார்கள். அவர்கள் யாரும் அருகில் இல்லாதது கன்னையாவுக்கு வசதியாக இருந்தது. . .

தனது கட்சியில் தனக்குத் தெரியாமல் தன்னைக் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவெடுத்தது திரு. வுக்குப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. ஒரு வேளை தான். எழில்ராஜாவைக் கொல்ல முயன்ற ஏற்பாடு இரகசியப் போலீஸ் மூலம் முதல்வருக்குத் தெரிந்து, அதை வெளியே. சொல்லாமல் தன் மேல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டி ருக்குமோ என்று கூடச் சந்தேகமாயிருந்தது திருவுக்கு. தான் இல்லாமல் தன்னைத் தவிர்த்துவிட்டு இயங்கமுடியும். என்று கட்சி மேலிடம் முடிவு செய்ததே அவனுக்குப். பொறுக்கவில்லை. கோபுரத்தைத் தானே தாங்குவதாக. அதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு பொம்மையும் நினைக்கலாம். ஆனால் எந்த பொம்மை விழுவதானாலும், கோபுரம் எதுவும் ஆகாது. இந்த உவமையை இதே. பொருள் வீச்சுடன் பலரைக் கட்சியிலிருந்து வெளியேற். றியபோதும், வேறு சிலர் தாமாக வெளியேறியபோதும். அவனே மேடைகளில் கூறியிருக்கிறான். இன்று. தனக்கே இந்த உவமையை நினைத்துப்பார்க்கும் போதும், ஒப்பிட்டுக் கொள்ளும்போதும் என்னவோ போலிருந்தது. கட்சியிலிருந்து தானே பலரை வெளியேற்றியது போக, இப்போது தன்னையே வெளியேற்ற முயற்சி நடப்பதை எண்ணுவது சிரமமாகத்தான் இருந்தது. தான் விழுகி றோமோ, அல்லது வீழ்த்தப்படுகிறோமோ, என்பது.