பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 179:

சல்யூட் வைத்து அவன் ஏறி உட்காருவதற்காகக் கார்க் கதவை மரியாதையாகத் திறந்து விடும் இன்ஸ்பெக்டர்கள் கான்ஸ்டேபிள்கள் யாரையும் காணவில்லை. மருத்துவ மனை ஊழியர்களும், தூக்கக் கிறக்கத்தோடு சோர்வாகத் தென்பட்ட இரண்டொரு நர்ஸுகளும், டாக்டரும், சைக்கி யாட்ரிஸ்ட்டும் தவிர வேறு யாரும் இல்லை. -

விமான நிலையம் வரை வந்து திருவை விமானம் ஏற்றி அனுப்பி விட்டு அதே ஏ. சி. செய்த காரில் சாலை வழியாக எழிலிருப்புக்குப் புறப்பட்டார்கள் சர்மாவும், கன்னையனும். பக்கத்து நகரிலுள்ள விமான நிலையத் தில் போய் இறங்கியதும் திருவை அங்கு வந்து அழைத் துச் சென்று எழிலிருப்பு டி பி. யில் விடுவதற்கு வேறொரு சினிமா விநியோகஸ்தரின் காரை ஏற்பாடு செய்தாயிற்று.

போய் இறங்குகிற இடத்திலும், தன்னை வரவேற்க எந்தக் கூட்டமும் வந்திராது மாலைகள் வாழ்த்தொலிகள் கிடையாது. அண்ணே என்று கைகட்டி, வாய் பொத்தி வரவேற்க ஆளில்லாத நிலை கவனிப்பின்மை எல்லாமே அவனைப் பொறுத்த வரை புதிய அநுபவம்தான். வருக. வருக என்று வரவேற்கும் ஆளுயரச் சுவரொட்டிகள் நீள மான மாலைகள், வரவேற்பு வளைவுகள் எல்லாம் இல்லா மல் சமீபத்து ஆண்டுகளில் அவன் எந்த ஊருக்கும். இப்படிச் சாதாரணமாகப் போக நேர்ந்ததே இல்லை.

யாரையும் கவனிக்காமல், யாராலும் கவனிக்கப்படா மல் இன்று முதல் முறையாக இப்படி ஒரு பிராயணம் வாய்த்திருந்தது. மந்திரி பதவியை இழந்து தேர்தலில் தோற்றபின் சின்ன உடையார் திரும்பி எழிலிருப்புக்குச் சென்றபோதும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று.

நினைக்கத் தோன்றியது.

ஆனால் அடுத்த கணமே, பரம்பரைப் மனிதன் என்ற முறையில் ஜமீன்தார் எழிலிருப்பிலிருந்து ப. டணத்.