பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் . 53

வீட்டு வாசற்படியின் அலங்காரத் திரைச் சீலையை விலக்கி மைதீட்டிய சிவந்த விழிகளும், பொய் நாட்டி முள்ள மயக்குச் சிரிப்புமாக, கட்டான உடல் அழகுடன் கூடிய இளம்பெண் ஒருத்தி எட்டிப் பார்த்து, "வாங்க” என்றாள். ..

உடனே யாரையோ பழி வாங்கிக் கொலை செய்யப் போவது போன்ற ஒரு வகை வெறியுடன் தான் அந்த வீட்டுக்குள் நுழ்ைந்திான் திருமலை. ஆம்! . அதுகூட ஒரு வகைக் கொலை வெறிதான். மூன்று காரியத்துக்கும் ஒரே வகையான வெறியுணர்வு தேவைப்படுவதாலோ என் னவோ கொலை, களவு, காமம் மூன்றையும் ஒரு வரிசை யில் சேர்த்து வைத்து எண்ணியிருந்தார்கள். உள் பட்டி னத்து ராஜ வம்சத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி எப்ப டியோ நெறி தவறி நொடித்து இந்த வழியில் வந்து இப்படிப் பள்ளத்தில் வழுக்கி விழுந்திருந்தாள். அவளைஅவள் எங்கிருந்து வந்தவள் என்று தெரிந்ததாலேயே அதிகமான மிருக வெறியோடு அணுகினான் அவன்.

தன் தாயைப் பழிவாங்கிய வம்சத்துப் பெண் ஒருத் தியை அதே விதமாகப் பழி வாங்கிவிட்டோம் என்பது போன்ற மிருகச் சந்தோஷத்தோடு தான் அன்றிரவு அங்கி ருந்து திரும்பினான் திருமலை.

முன்பு பொன்னுச்சாமி அண்ணனுக்குத் துரோகம் செய்தது போலவே தன் வாழ்வுக்கு மற்றொரு கரையா யிருந்த சண்பகத்துக்கும் இப்போது துரோகம் செய்ய ஆரம்பித்திருந்தான் அவன்.

முதலில் அவன் மேல் குருட்டு விசுவாசத்தோடிருந்த ஒரு விசிறி தொடங்கி வைத்த இந்தக் கெட்ட பழக்கம் நாளடைவில் கூட்டம் முடிந்தவுடன் மது, மாமிசம்,உணவு ஆகிய மற்றவற்றைப் போல ஒர் அவசியமும் வழக்க ஆம் ஆகிவிட்டது. கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறவர்கள் இதற்

. 4سسgp :