பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

திருமலையின் வளர்ச்சியில் மாறுதலும், மாறுதலில் வளர்ச்சியும் இருந்தன. 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அவன் ஈரோட்டுப் பாதையிலிருந்து காஞ்சிப் பாதைக்கு வந்து சேர்ந்ததைப் போலவே தமிழ் நாட்டின் பெருவாரியான இளைஞர்களும் வந்திருந்தனர். சென்னை மாநகரில் ராபின்சன் பூங்காவில் புதிய கட்சி பிறந்த கூட்டத்திற்கு அவனும், நண்பர்களும் வந்து கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது மாபெரும் உற்சா கத்தோடு திரும்பியிருந்தனர். - - -

திருமலை ஊரில் இல்லாத போது அவன் பெயருக்குத் தபாலில் வந்திருந்த ஒர் அரசியல் மஞ்சள் பத்திரிகையைத் தற்செயலாகப் பிரித்துப் படிக்க நேர்ந்த சண்பகம் ஏற்கெ னவே பராபரியாகக் கேள்விப்பட்டிருந்த பல வதந்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. திருமலையின் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல் மஞ்சள்பத்திரிகை திருமலைக்குப் பல ஊர்களில் பல்வேறு பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் ஐயா இதைக் கண்டித்ததால் தான் அவன் விலகியதாகவும் எழுதியிருந்தது. பத்திரிகை யைப் படித்ததும் சண்பகம் இடிந்து போனாள். அவள் மனம் சுக்கல் நூறாக உடைந்து சிதறினாற் போலிருந்தது. மனத்தை விட்டு விடாமலிருக்கச் சிறுவன் ராஜாவை அணைத்து உச்சி மோந்து ஆறுதலடைய முயன்றாள். அன்று குழந்தைக்கு இராவணன் என்று பெயர் சூட்டச் செய்த திருமலை இன்று தானே இராவணாக மாறிக் காடு மேய்வது அவளை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. அவள்

மனம் தடுமாறிக் குமுற ஆரம்பித்தது. . . . .

திருமலை சென்னைக்குப் போய் விட்டுத் திரும்பிய 'தினத்தன்று காலை மற்ற தபால்களை எல்லாம் அவனிடம் அடுக்கிக் கொடுத்த சண்பகம், அந்தப் பத்திரிகையை