பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 75.

என்பது அவனுக்கு உறைக்கவில்லை. சண்பகம் தன்னை மிகவும் மரியாதைக் கு ைற வாக ப் பேசி விட்டுக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு தம்பியோடு ஒடி. விட்டாள் என்பது ம ட் டு மே நினைவுக்கு வந்தது. ஊரிலிருந்து வந்து போன யார் மூலமோ, அவள் நந்த வனத்தில் பூத்தொடுத்துக் காலந்தள்ளுகிறாள், மகன் இராவணன் என்கிற ராஜாவை உள்ளுர்க் கான்வெண்ம் பள்ளி ஒன்றில் சேர்த்திருக்கிறாள் என்றெல்லாம் தகவல் கள் காதில் விழுந்தன. - .

திருமலை கடந்த காலத்தையும், கவலைகளையும் மறக்க நிறையக் குடிக்க ஆரம்பித்தான். ஊரில் எப்போதா வது பீடி என்றிருந்த புகைப் பழக்கம் இப்போது சிகரெட்" ஆகி செயின் ஸ்மோக்கிங்’ என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தது. எவ்வளவோ மனக்கசப்பு இருந்தும். படிக்கிற மகனுக்கு உதவியாக இருக்கட்டும் என்று சண்ப கத்தின் தம்பி பெயருக்கு ஆரயிம் ரூபாய்க்கு டிராஃப்ம் ஒன்று எடுத்து அனுப்பியிருந்தான் அவன். ot

'நமது மனத்தாங்கள் நம்மோடு போகட்டும். குழந்தை சிரமப்பட வேண்டாம். அவனை நல்ல கான் வெண்டாகப் பார்த்துச் சேர்த்திருப்பது பற்றி மகிழ்ச்சி உங்கள் சிரமங்களோடு அவனது படிப்புச் செலவுகளையும் தாங்குவது முடியாத காரியம் என்று எனக்குப் புரிகிறது. என் மேல் கோபப்படாமல் அவ்வப்போது நான் இப்படி அனுப்புகிற பணத்தை ஏற்றுக் குழந்தையின் படிப்புச் செலவுகளுக்குப் பயன்ப்டுத்திக் கொள்ளவும்’ ’ என்று அந்த டிராப்ஃடோடு சண்பகத்தின் தம்பிக்கு ஒரு கடிதமும் வைத்திருந்தான் அவன். . . .

டிராப்ஃப் சுவரில் அறைந்த பந்தாகத் திரும்பி வந்து சேர்ந்தது. அதோடு சண்பகத்தின் தம்பி கடுமையான

மொழி நடையில் ஒரு கடிதமும் எழுதியிருந்தான்.

நான் ஒருவன் இருக்கிற வரையில் சன் அக்காளும், மருமகனும் நாதியற்றுப் போய் விட மாட்டார்கள். உங்கள்