பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 9 :

"கல்ச்சர்' என்ற அம்சம் பூஜ்யமாகவே இருப்பதைப் பார்த்து உதவியாளன் கன்னையா உள்ளுற வருத்தப்பட் டான். பணவசதி, படாடோபம், ஜமீன் ஆட்சியுரிமை, எல்லாம் பறிபோன பின்பும் உள்பட்டனத்து அரச வம்சத்தினரிடம் ஒட்டிக் கொண்டிருந்த பண்பாடும் பெருந்தன்மையும் மட்டும் குன்றாமல் குறையாமல், அப்படியே இருந்தன. அதைக் கண்டும் அவர்கள் மேலே பொறாமைப்படுவதைத் தவிரத் திருமலையால் வேறெதுவும் செய்ய் முடிய வி ல் ைல. அவனது இயக்கம் முதல் முதலாகத் தேர்தலில் இறங்கி எப்படியோ மாநிலம் முழுவதுமாகச் சேர்த்து ஒரு பத்துப் பதினைந்து இடங்களில் சட்டசபை உறுப்பினர் பதவியைக் கைப்பற்றி யிருந்தது. எதிர்பார்த்ததைவிட இது குறைவுதான் என்றாலும் அரசியலில் பதவியைப் பிடிக்கும் முயற்சிக்கு ஆரம்பம் கிடைத்து விட்டதற்காக அவர்கள் மகிழ்ந் தார்கள்.

14

தேர்தல் தோல்விக்குப் பின் கணக்கு வழக்குகளைத் தீர்க்கவும் எலெக்ஷன் வேலையாக அலைந்த வாடகைக் கார்கள் முதலியவற்றுக்குப் பணம் கொடுத்துக் கணக்குத் தீர்க்கவும் சில நாட்கள் தொடர்ந்து அவன் எழிலிருப்பில் தங்கியாக வேண்டியிருந்தது. போஸ்டர்கள், துண்டுங் பிாசுரங்கள். தேர்தல் ஸ்லிப்புக்கள் அச்சிட்ட வகையில் நிறையப் பணம் தர வேண்டியிருந்தது. ஒலிபெருக்கி மேடை ஏற்பாடுகள், ஊழியர்களுக்குச்சாப்பாடு, சிற்றுண்டி வாங்கிய ஒட்டல் கணக்கு எல்லாம் நிறையப் பாக்கி -யிருந்தன. கன்னையாவையும் சர்மாவையும் உடன் வைத்துக் கொண்டு அவற்றை எல்லாம் சரிபாாத்துப் பட்டு வாடா செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொன்றாகச் செய் தான். - -