பக்கம்:மூவரை வென்றான்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113


கால் நாழிகை அங்கேயே உட்கார்ந்து விக்கி விக்க அழுதார். பறிகொடுக்க முடியாததைப் பறி கொடுத்து விட்ட மாதிரி மனத்தில் ஒரு சோகக் குமுறல். பின்பு மேல் துண்டால் காதுமறையும்படி முண்டாசு கட்டிக்கொண்டு, மூட்டையுடன் ஊரை நோக்கிப் புறப்பட்டார். அவர் ஊருக்குள் வரும்போது பலபலவென்று விடிந்துவிட்டது, வீட்டுக்குள் நுழைந்ததும், மூட்டையை வைத்துவிட்டு: ரேழியில் தெற்கே தலை வைத்துப் படுத்துக் கொண்டார். ராஜுவைக் கூப்பிட்டார்.

“கொஞ்சம் என் தலைமாட்டிலே உட்கார்ந்து திரு வாசகம் வாசிடா ராஜு!”

“எதுக்கு அண்ணா? ஒரு நாளும் இப்படி இத்தரவாய்க்கு, அலுத்துப் படுக்க மாட்டியளே?”

“நீ திருவாசகம் வாசிடா சொல்றேன்.”

“காதை மறைச்சு முண்டாசு கட்டிண்டிருக்கியளே வாசிச்சர்ல் காதுலே கேக்குமா? அதை அவுத்துடட்டுமா?”

“அதை அவுக்கப்படாது! எனக்குக். கேட்குமா...நீ வாசி.”

ராஜூ திருவாசகம் வாசித்தார். அவரை நாழிகையாக வாசித்துக்கொண்டே இருந்தார்.

“அண்ணா! வாசிச்சது போருமா?” - பதில் இல்லை!. ‘அண்ணா! அண்ணா துரங்கியட்டியளா?’ தோளைத்தொட்டு உசுப்பினார். தலை தொங்கிவிட்டது! முண்டாசை அவிழ்த்தார்! காதுகள் அறுத்து மூளியாகத் தொங்கின. ராஜு. விசித்து விசித்து அழுதார். மோதிரக் கடுக்கண் முத்துசாமி ஐயர் காலமாகிவிட்டார். அவர் முன்பொருநாள் அறை கூவியபடியே பிறரால் ஏமாற்றப்பட்டு இறந்தாரே ஒழியத் தன் நினைவோடு பிறரால் எதிர்த்துக் கொல்லப்பட வில்லை!

எங்கள் தாத்தாவிடம் அந்தக் காலத்தில் தலைவெட்டிக் காட்டையும் மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயரையும்