பக்கம்:மூவரை வென்றான்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

மூவரை வென்றான்/ஊசிக்கொண்டைத்...

செய்யலாம் என்று மூளையைக் குழப்பிக்கொண்டு இருந்தார் தேவர்.

அவருடைய குழப்பம் எதிர்பாராதவிதமாக இவ்வளவு எளிதில் தீர்ந்து வெற்றி கிட்டும் என்று அவர் கனவிலுங் கூடக் கருதியிருக்கமாட்டார். அந்த வருடம் புவனநாயகர் கோவில் திருவிழாவுக்கு வள்ளியும் தங்கராஜூம் வந்திருந் தனர். வள்ளியின் வற்புறுத்தலினால்தான் தங்கராஜு வந்திருந்தான். தன் வலது கையைப் பலிவாங்கிய முல்லை யூற்று, நினைக்கத் துன்பமான எண்ணங்களையே மீண்டும் மீண்டும் அவன் கண்முன் நிறுத்தியது. கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியேறிய வள்ளியும் தங்கராஜூம் திருவிழாக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வந்திருந்த போலீஸாருக்கிடையே இன்ஸ் பெக்டர் நல்லமுத்துத் தேவரைக் காண நேர்ந்தது. பார்த்து விட்டோமே என்ற தோஷத்திற்சாக வலதுகையை சலாம் செய்வதுபோலப் பாவனை காட்டினான் தங்கராஜு. இன்ஸ் பெக்டர் புன்னகை பூத்தார். பக்கத்தில் நின்றுகொண்டிருத்த வள்ளியை யாரோ ஒரு முரடன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டே பார்த்தவண்ணமிருந்தான். இன்ஸ்பெக்டருக்கு, வணக்கம்:செலுத்திவிட்டுத் திரும்பிய தங்கராஜ வள்ளியை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அந்த முரடனை நோக்கி னான். அந்த முரடனின் கண்களிலும் ஏதோ கலக்கம், பாசத்துடன் கலந்து நிழலிடுவதுபோலத் தங்கராஜூவுக்குத் தெரிந்தது. இதெல்லாம் கூட்டங்களில் ஏமாற்றும் பேர்வழிகள் வேலை என்று மனத்தில் தீர்மானங்கொண்டவனாய் அவனை மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தான். பார்த்தவன்...வாயி லிருந்து வார்த்தை வரவில்லை..முண்டாசும் பனியனுமாக இருந்த தோற்றமே தங்கராஜுக்கு முதல் நோக்கில் அந்த மனிதனுடைய அறிமுகத்தை இவ்வளவு காலங்கடத்தியவை. ‘மாயாண்டித் தேவன்! மாயாண்டித் தேவன்! பிடியுங்கள்! அதோ... அதோ நிற்கிறான்’ - தங்கராஜு வாய்விட்டுக் கத்திவிட்டான்.