பக்கம்:மூவரை வென்றான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

25

ஜமீன்தாருக்கென்ன! இதுவரை அவருடைய ஜமீன் சொத்துக்களிலோ, ஜமீன் மாளிகைக்குள்ளிருந்தோ, ஒரு சிறு துரும்பு கூடத் தீவட்டிக் கொள்ளைக்காரர்களால் களவாடப் பட்டதில்லை. செளக்கியமாக ஊரைப் பற்றிய கவலையே இல்லாமல் வாழ்கிறார்! ‘ஊரார் எக்கேடு கெட்டால் அதைப் பற்றி அவருக்கென்ன கவலை?’ என்று அங்கங்கே ஜனங்களிடம் ‘கசமுசல்’ கிளம்பி விட்டது. தீவட்டிக் கொள்ளைக்காரர்களிடம் இருந்த ஆத்திரத்தை விட ஜமீன்தார் மேல் தான் இப்போது ஊாரரின் ஆத்திரம் பெருகியிருந்தது.

ஊரில் வாய்ப் பேச்சிலும் காரியத் திறமையிலும் புத்திக் கூர்மையிலும் சிறந்த தலைக்கட்டு ஒருவர் இருந்தார். மங்கலக் குறிஞ்சியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. பலருக்கு அவரிடம் மதிப்பும் விசுவாசமும் இருந்ததனால் அவர் சொன்னபடி செய்யத் தயாராயிருந்தார்கள். அவர் தான் தெய்வச் சிலைத் தேவர். ஊரில் தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் நடமாட்டமும், தொல்லையும் பெருகப் பெருக அதை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டுமென்று முயன்ற பெருமை அவருக்கு உண்டு.

தெய்வச் சிலைத் தேவருக்கு வயது ஏறக்குறைய ஐம்பதுக்கு மேலேதான் இருக்கும். ஆள் என்னவோ இருபத்தைந்து வயதுக் கட்டிளங் காளை மாதிரிதான் ஒடியாடித் திரிவார். கட்டுமஸ்தான தேகமும், வைரம் பாய்ந்த நெஞ்சும் உடையவர் அவர். தீமையை அஞ்சாமல் தனித்து நின்று எதிர்க்கும் துணிவு அவருக்கு உண்டு. தெய்வச் சிலையார் ஒரு காரியத்தில் தலையிடுகிறார் என்றால் அந்தக் காரியத்தைப் பற்றி நினைக்க ஜமீன்தாருக்கே குலை நடுக்கம்தான். கையில் பிச்சுவாக் கத்தியுடன் அவர் நிமிர்ந்து நின்றால் மதுரை வீரசாமியின் பிரம்மாண்டமான சிலையைக் கண்ணெதிரில் நேரே உயிரோடு பார்ப்பது போலிருக்கும். நல்ல உயரமான ஆகிருதி, ஆண் சிங்கம் ஒன்று பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து முழக்கி நிற்பது போன்ற உடல் அமைப்பு. நீண்ட வள்ர்ந்த தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/27&oldid=506440" இலிருந்து மீள்விக்கப்பட்டது