பக்கம்:மூவரை வென்றான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

மூவரை வென்றான்/பெரிய...

களாய் நின்ற இடத்திலேயே நின்றனர். திகைப்பினாலும் பயத்தினாலும் எதிர்பாராத நிகழ்ச்சியாலும் என்ன செய்வ தென்றே அவர்களுக்குப் புரியவில்லை.

“இதுதான் என்னுடைய தெம்பு! - அதாவது ஐம்பது. வயதுக்கிழவனின் தெம்பு! இளைய ஜமீன்தாரவர்கள் விருப்பப் படி இதை இங்கே காட்டிவிட்டேன்...”

“தெம்பில்லை! இது வஞ்சகம்.” - பயத்தினால் அடித் தொண்டையிலிருந்து வெளிவந்து ஜமீன்தாரின் குரல்.

“அப்படித்தான் வைத்துக்கொண்டாலும் உங்கள் வஞ்சகத்தை விடவா பெரிது இது?” - தெய்வச்சிலையாரின் கத்தி ஜமீன்தாரின் கழுத்தை துணியால் தடவிக்கொடுத்தது, பளபளவென்று தீட்டப்பட்டிருந்த அந்தக் கத்தியின் ஒளி ஜமீன்தாரின் சிவந்த சருமத்தில் வெள்ளை நிழலாக ‘டால’ டித்துக் கொண்டிருந்தது.

“ம்ம்ம்! ஜமீன்தாரே! உம்முடைய ஆட்களைக் கம்பு களைக் கீழே போடச் சொல்லும். கீழே போட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல் போய் வாசற் கதவைத் திறக்கச் சொல்லும்...”

“சொல்லாவிட்டால்...”

“இந்தப்பிச்சுவா உமது கழுத்தை ஆழம் பார்க்கும்!” சொல்லிக்கொண்டே கத்தியைக் கழுத்தில் இலேசாக அழுத்திக் காட்டினார் தேவர். ஜமீன்தாருக்கு மூச்சுத் திணறியது. உண்மையிலேயே அவர் பயந்து போய்விட்டார். தேவர் சொன்னபடியே கழிகளைக் கீழே போட்டுவிட்டு வாசற் கதவுகளைத் திறந்துவிடுமாறு தம் ஆட்களுக்குச் சைகை செய்தார். அவர்கள் கழிகளைக் கீழே போட்டுவிட்டுப் போய்க் கதவைத் திறந்தனர். வெளியேறிச் செல்வதற்குள் மீண்டும் தம்மை அந்த ஆட்கள் மறிக்கக் கூடாது என்பதற்காகத் தெய்வச் சிலையார் கழுத்தருகில் வைத்த கத்தியை எடுக்காமலே ஜமீன்தாரையும் வாயில்வரை நடத்தி இழுத்துக்கொண்டு போனார். ஜமீன் மாளிகையிலிருந்து வீதியில் இறங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/34&oldid=507795" இலிருந்து மீள்விக்கப்பட்டது