பக்கம்:மூவரை வென்றான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மூவரை வென்றான்/பெரிய...


கினார். மரத்திலேறினவர்களும் கீழே குதித்து விரட்டினர். முதல் முதலில் மரத்திலிருந்து அரிவாளோடு குதித்தவன் மட்டும் எழுந்து நடக்க முடியர்மல் கால் பிசகிக் கீழே விழுந்து கிடந்தான். மற்றவர்கள் அத்தனை பேரும் தேவரைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தனர். அவர் ஓட: அவர்கள் துரத்த, நேரம் கழிந்துகொண்டிருந்தது.

கொள்ளைக்காரர்களின் தலைவன் ‘பெரிய மாயன்’ தன் ஆட்களுக்காகக் குதிரைகளோடு காத்திருக்கிற இடம் வரை அவர் ஓடி வந்துவிட்டார். குதிரைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததனால் அவர் ஓடுவதற்கு வழி இல்லை. துரத்துபவர்கள் அருகில் நெருங்கிவிட்டனர். தாம் என்ன செய்யலாம் என்றே அவருக்கு விளங்கவில்லை. எதிர்ப்புறம் குதிரைமேல் பெரிய மாயன் உட்கார்ந்துகொண்டிருக்கிறான். பின்புறம் துரத்துபவர்கள் நெருங்கிவிட்டார்கள். தாம் கொள்ளைக்காரர்கள் வழக்கமாக அணிந்து கொள்ளும் உடையில் இருந்ததை எண்ணியதும் சட்டென்று அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது. முதலில் பெரிய மாயன் ஏறிக் கொண்டிருந்த குதிரை நின்றுகொண்டிருந்தது அடுத்திருந்த குதிரைகள் வரிசையாகச் சவாரிக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன. இரண்டாவதாக நின்ற குதிரையில் தாவி ஏறிக்கொண்டார் தேவர். அவருடைய உடையினால் பெரிய மாயன் சந்தேகம் கொள்ளவில்லை.

“என்ன? மற்றவர்கள் எங்கே? நீ மட்டும் ஏன் ஓடி வருகிறாய்?”-பெரிய மாயன் அதிகார தோரணையில். கேட்டான். அந்தக் குரலைக் கேட்டதும் தெய்வச்சிலையாருக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது! ஆகா இது யாருடைய குரல்? எவ்வளவு பயங்கரமான உண்மை?-அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது.

பின்னால் ஆட்கள் கூச்ச்லும் கூப்பாடுமாகத் துரத்தி வருவதைக் கேட்டு அந்த அதிர்ச்சியில் முதல் இரண்டு குதிரைகளும் கிளம்பிவிட்டன. முன்னால் பெரிய மாயனின் சிவப்புக் குதிரை. அடுத்துத் தேவரின் குதிரை. துரத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/50&oldid=507814" இலிருந்து மீள்விக்கப்பட்டது