பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மெழுகுச் சிறகுகள் 69 ஆசைதுறந்தவர்கள் - அதனால் அனைத்திலும் சிறந்தவர்கள் பாச உயிர்ப்பரிவே - அன்றிப் பாரிடை ஏதுமிலார் நேசம் என்பதொன்றே - பணியாய் நினைக்கும் ஏதுமிலார் பேசாச் சிலைளென . நிற்கும் பிட்சுகளிடை அவன்வந்தான்! ஊமை விழிகளிலே - வாழ்வை உதறிய இமைகளிலே சாம மையிருட்டு! தோல்வி தந்ததொரு பெருஞ்சோகம்! சேமம் குலைந்துவிட்டக் - கலிங்கத் திகைப்பின் நெடுமெளனம்! தாம மார்புடையான் - இதயம் தகித்ததுவே அதுகண்டே! வெற்றிக் கையமர்ந்து - கர்வம் iங்கிய தாமரைதான் நெற்றியவன் சுளிக்கையிலே - தானே நிலத்தில் நழுவியதே! முற்றியே கருணையதும் - தனது முதல்கண் ணிரிட்டதுவே! பற்றுகள் அறுந்தனவே! அருளின் பண்ணதும் பிறந்ததுவே!