பக்கம்:மேரியின் திருமகன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

எச்சரிக்கை பெற்ற சூசையும் எகிப்து சென்றார்
ஞானியரை எதிர்பார்த்திருந்த ஏரோது
காலம் தாழவே கவலை கொண்டான்
பெத்லகாமில் பிறந்த குழந்தைகள்
அத்தனையும் கொன்றுவிட ஆணையிட்டான்
தாய்மை அழுதது தரைமகள் சிவந்தாள்

பாலயோகியின் அறைகூவல்

ஏசு எகிப்துக்குச் சென்றபின் இங்கே
அருளப்பர் பாலயோகியாய் பரிமளித்தார்
வார்க்கச்சுடன் ஒட்டக மயிராடை உடுத்தினார்
மதுவும் மாதும் அவருக்குப் புறம்பு
காட்டுத் தேனுடன் வெட்டுக் கிளியுண்டார்
யோர்தான் கரைநெடுக அலைந்தார், திரிந்தார்
பாவிகளை மனந்திருத்தி ஞான முழுக்காட்டினார்
பரிசேய சதுசேய பண்டிதர் வந்தார்
எலியாசோ மெசியாவோ நீர் யாரென்று கேட்டார்
கணக்குத் தீர்க்க கர்த்தர் வருகிறார்
“அவர் மிதியடியை அவிழ்க்கத் தகுதியற்றவன்
ஆண்டவருக்கு முன்வந்த அறைகூவல் நானென்றார்
அடிமரத்தில் கோடாரி வைத்தாயிற்று
பாவிகளே இன்றே திருந்துங்கள் இன்றேல்
பரிசுத்த ஆவி உங்களை சுட்டெரிக்கும்
உங்கள் உதடுகள் உண்மையே பேசட்டும்
குரலோ தெய்வத்தைக் கூவி அழைக்கட்டும்