பக்கம்:மேரியின் திருமகன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தரையில் விழுவதில்லை என்பதை உணருங்கள்
விலையின்றி பெற்றிருக்கிறீர்கள். விலையின்றியே உதவுங்கள்
வேலையாளுக்கு உணவின் உரிமை உண்டென்று
சீடர்களை தூதுரைக்க அனுப்பி வைத்தார்.


வாதாடும் மனத்தோடு வந்த பரிசேயர்
பராபரனின் திருமகனிடம் பலவாறு கேட்டார்
மனம் ஒவ்வாத மனையாளை ஒதுக்க
மோயீசன் முறிவுச் சீட்டுக் கொடுக்கச் சொன்னார்.
போதகரே, தங்கள் கருத்து யாதென்று கேட்டனர்

பெற்றோரைப் பிரிந்து பெண்ணும் பிள்ளையும்
ஒன்றானபின் அவர் இருவரல்லர் ஓருயிர்
இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்
என்றார்
இறந்தவன் உயிர்த்தெழுதலை ஒப்புவதானால்
மூத்தவன் மனைவி அவனுக்குப் பின்னால்
இளையவனுக்குரியவள் என்பது மரபு
சோதரர் எழுவர் தொடர்ந்து இறந்தார்
அவளும் எழுவருடன் வாழ்ந்து இறந்தாள்
உயிர்த்தெழும் போது அவள் யாருக்கென கேட்டான்
மனித உறவும் மாமிச உடலும்
உயிர்த்தெழுந்தவர்கில்லை என்பதுணர்வீர்
விண்ணரசில் கொள்வதுமில்லை. கொடுப்பதுமில்லை
தேவதூதரைப் போன்றிருப்பார்
என்றார்