பக்கம்:மேரியின் திருமகன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


தட்டுங்கள் திறக்கப்படும்

அதுபோது மக்கள் சூழ்ந்து கொண்டனர்
மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்காதீர்
கரையான் அரிக்கும் கள்ளர் திருடுவார்
விண்ணுலகுக்கான செல்வம் சேர்ப்பீர்
இறைவனின் சமாதானம் உங்களோடிருக்கும்
நீங்கள் இடும்தீர்ப்பே உங்களுக்கு இடப்படும்
வழக்கை வழியிலேயே தீர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் கண்ணிலுள்ள விட்டத்தை மறந்து
சகோதரன் கண்ணில் துரும்பெடுக்க வேண்டாம்
கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்
கொடுங்கள் அளக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்
அப்பம் கேட்ட பிள்ளைக்கு அப்பன்,
கல்லைக் கொடுப்பதில்லை என்பதறிவீர்
மானிடருக்கே அந்தமதி இருக்குமானால்
இறைவன் தரும் நன்மைக்கு அளவென்ன கண்டீர்
கோழி குஞ்சுகளை ஒன்று சேர்ப்பதுபோல்
உங்களை ஒன்று திரட்டப் பாடுபட்டேன்
தேவஞானம் சரியென்று நீங்கள் ஒப்பவில்லை
எருசலேம் அழியும் நாளில் அறிவீர் என்றார்
மறுமுறையும் சொன்னார் இறைமகன் எருசலேமில்
மூப்பரால் கொலைக்கு கையளிக்கப் படுவார்
ஆண்டவர் பெயரால் வருகின்றவர் வாழி