பக்கம்:மேரியின் திருமகன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

என்றழைக்கும் நாள் வரப்போகிறது என்றார்.
முழுப்பொருளும் உணராது சீடர் பதைத்தனர்
ஒலிவ மலையருகில் வந்த போது
ஏசு சீடர் இருவரை அழைத்தார்
எதிரே இருக்கும் ஊருக்குச் செல்லுங்கள்
கழுதை கட்டியிருக்கும் அவிழுங்கள் ஏனென்பார்
உன்னுடைய அரசர் கழுதையின் மேல் வருகிறார்
என்ற வாக்கு பலிப்பதற்கென்று சொல்லுங்கள்
மறுப்பிருக்காது ஊர்வலம் செல்வேன். என்றார்
கழுதைக்கு சேனமிட்டனர் கம்பளமிட்டனர்
வழிநெடுக மக்கள் போர்வை விரித்தார்
தழைகளைப் பரப்பினார் குருத்தோலை பிடித்தார்
முன்னே சென்றவரும் பின்னே வந்தவரும்
தாவீதின் மகனுக்கு ஓசன்னா ஓசன்னா
உன்னதங்களின் ஓசன்னா என்று ஆர்ப்பரித்தார்.
எருசலேம் நகரம் இவர் யாரென்று கேட்டது
ஏசு என்னும் இறைவாக்கினர் என்றனர்
ஆயக்காரரும் பாவிகளும் ஆண்டவரைச் சூழ்ந்தனர்
பிணியாளர் கூட்டம் பெருகிற்று. அங்கே
..ணென்று வந்தவர்க்குத் தானே மருந்தாகி
அவர் பிணிகளை ஏற்றார், நோவுகளைச் சுமந்தார்
தவற்றை உணர்ந்து தவத்தைக் கேட்டவர்க்குத்
தேவன் வீட்டுத் திருக்கதவைத் திறந்தார்:

அதுசேய சட்ட வல்லுனன் ஒருவன்
ஆண்டவரின் செய்கைகட்கு ஆதாரம் கேட்டான்.

4