பக்கம்:மேரியின் திருமகன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உங்கள் துயரத்துக்குச் சுமைதாங்கி யானேன்
உலகின் பாவத்தை என் ரத்தத்தால் கழுவினேன்
சாத்தானை வென்றேன் சத்தியமாய் நின்றேன்
துன்பம் என்னைத் தொட்டதில்லை
மரணத்தை வென்றேன் மனுமகனே இறைமகன்
உயிரும் நானே உயிர்ப்பும் நானே
ஒளியும் நானே உண்மையும் நானே
பிதா சுதன் பரிசுத்த ஆவியினும்
பெரிய மந்திரம் வேறு இல்லை
சித்தத்தை என்பால் வைத்து செபித்திருங்கள்
துன்புறும் வேளையில் சிலுவையாய் தெரிவேன்
உலகம் முடியும் வரை உங்களோடிருப்பேன்
அன்பே வழித்தடம் சகிப்பே இருப்பிடம்
தொண்டே என்பணி தொடருங்கள்
என்றருளினார்
பெத்தானியா நோக்கிச் சென்றனர். அங்கே
பரிசுத்த ஆவியால் அவர்களை நிரப்பினார்
சீடர்களும் தெளிந்தார் தேவர் ஆனார்
அனைவரும் காண ஆண்டவரும் மனுமகனாக
வானகத்துக்கு எழுந்துச் சென்றார், வாழிய
ஆலயங்கள் ஆண்டவரின் திருப்புகழைப் பாடிற்று
செபக் கூடங்கள் தேவனின் திருநாமத்தை ஓதிற்று
கருத்தரின் கருணை வெள்ளம் கரைபுரண்டது
ஏசு கிறிஸ்து இறை மகன் மெசியா
என்ன பேரிட்டாலும் தேவன் ஒருவனே
வாழ்த்தி வணங்கி வாழ்வோம் யாமே

▢ ▢ ▢