பக்கம்:மேரியின் திருமகன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

மெத்த மெனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே, மனஸ்தாபமில்லாமல் வேறு மனஸ்தாபமில்லை எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனி மேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலம் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப்பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். திருச்சபைவிசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதனால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.


9. சுருக்கமான உத்தம மனஸ்தாபம்

என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதனால் என் பாவங்களால் உமக்குச் செய்த துரோகத்துக்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன். இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால் இப்பேர்ப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன். ஆமென்.

10. பாவசங்கீர்த்தன மந்திரம்

எல்லாம் வல்ல இறைவனிடமும்,
சகோதரரே, உங்களிடமும்.
நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும்,
செயலாலும், கடமையில் தவறியதாலும்,
பாவங்கள் பலசெய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும்பாவமே
ஆகையால், எப்பொழுதும் கன்னியான
பரிசுத்த மரியாயையும்,
வானதூதர் புனிதர் அனைவரையும்,
சகோதரரே, உங்களையும்
நம் தேவனாகிய ஆண்டவரிட
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்.