66
மைக்கேல் காலின்ஸ்
66 மைக்கேல் காலின்ஸ் களவு செய்த குற்றவாளிகளேப் போலவே அவர்களும் கடத்தப்பட்டனர். அவர்கள் தங்களே யுத்தக் கைதி களாக நடத்தவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். இதல்ை சிறைக்குள்ளும் போராட்டம் முற்றிவந்தது. முதலில் லியூஸ் சிறையிலிருந்த கைதிகள் ஒரு சங்கமாகக் கூடி வழிகாட்டினர். ஈஸ்ட்டர் கலகத்தில் அரும் போர் செய்து பெருமையடைந்த வீரரான டிவேலரா அவர்கள் தலைவராக இருந்தார். கைதிகள் அவருடைய தீர்மானங் களுக்குக் கீழ்ப்படிந்து மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்கள். அவர்களில் ஒரு கைதியை அதி காரிகள் தண்டித்ததற்காக டிவேலரா வேலேகி அத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். பலவிதத் தண்டனேகளேயும் பொருட்படுத்தாது கைதிகள் உறுதியுடன் கின் அறு முடிவில் வெற்றியடைந்தனர். சிறைகளுக்குள்ளே புழுங்கிக்கொண்டிருந்த பல தொண்டர்களின் நிலமையைத் தேச மக்களின் ஞாபகத் திற்குக் கொண்டுவர வேண்டும் என்று காலின்ஸ் முதலி யோர் கருதினர். அதற்கேற்ற ஒரு சந்தர்ப்பமும் வாய்த் i. தது. லாங்போர்டு தொகுதியில் பார்லிமெண்டு அங்கத்தினர் ஸ்தானத்திற்குத் தேர்தல் நடக்க வேண்டியிருந்தது. காலின்ஸ் கூட்டத்தார் லியூஸ் சிறையில் அடைக்கப்பட் டிருந்த ஜோஸப் மக்கின்னஸ் என்பவனே அபேட்சகளுக நிறுத்திவைத்தனர். சிறைகளில் தேசபக்தர்கள் படுக் துயரங்கள் எங்கும் பிரசாரஞ் செய்யப்பட்டன. கைதியின் உடையோடுகூடிய உருவப்படம் ஒன்று ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு எங்கும் ஒட்டப்பட்டது. அப்படத்தின் அடியில், இவனே வெளியே கொண்டுவர இவனே உள்ளே அனுப்புங்கள்! “ என்று எழுதப்பட்டிருந்த அ. அந்த
- “Put him in to get him out I’