பக்கம்:மொழியின் வழியே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மொழியின் வழியே!

அரங்கில் நாடகத்துக்கென்று ஒரு கதை, அதில் உணர்ச்சிகளாலும், குணங்களாலும், வேறுபட்ட பல வகைக் கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து வளரும் சம்பவத் திருப்பங்கள், கதையின் இணையற்ற உச்சநிலை - இவையெல்லாம் ஏற்பட்டு வளரும் சூழ்நிலை உருவானபோதுதான் இந்தத் துறை தனி மதிப்புப் பெற்றது. -

நாடகத் துறைக்கு ஏற்பட்ட இந்த வளர்ச்சி சிலப் பதிகாரக் காலத்துக்கு முன்பே உயர்வு பெற்று ஒங்கத் தொடங்கியிருந்ததென்று கூறலாம். பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், மதிவாணர்நாடகத் தமிழ் நூல், கூத்த நூல் ஆகிய நாடகத் தமிழ் நூல்களெல்லாம் இருந்தன என்பது சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையால் தெரிய வருகிறது. நாடகக் கலை இணையற்ற வளர்ச்சி பெற்றிருந்த அந்தக் காலத்துக்குப் பின் 'இசை நாடகம் காமத்தை விளைவிக்கும். - என்ற தவறான கருத்தால் எவராலும் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப் பெற்று நலிந்துபோகும் நிலையும் ஒரு காலத்தில் வந்தது. அதுதான் நாடகக் கலையின் வரலாற்றிலேயே இருண்ட காலம். - -

இனி நாட்கக் கலையில் பழந்தமிழர் கொண்டிருந்த வழக்காறுகள் சிலவற்றைக் கவனிப்போம். நடிப்போர் நிகழ்த்துமிடம் அரங்கம் எனவும், காண்போர் அமருமிடம் அவையம் எனவும் பிரிக்கப்பட்டது. அரசர் முதலாயி னோருக்காகச் சிறப்பு வகையால் நடிக்கப்படுபவை வேத்தியல் எனவும் எல்லார்க்கும் பொதுவாக நடிக்கப் படுபவை பொதுவியல் எனவும் வகை செய்யப்பட்டிருந்தன. அரங்கம் எவ்வாறு அமையவேண்டும் என்றும் பழைய நாடக நூல்களெல்லாம் இலக்கணவரையறை செய்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/80&oldid=621424" இலிருந்து மீள்விக்கப்பட்டது