15,
இலெனின்
உலகைக் குலுக்கிய புரட்சியை உண்டாக்கிய இலெனின் பல்வேறு நேரங்களில் எழுதிய-பேசிய மொழி பற்றிய கருத்துகளைத் தொகுத்து மொழியைப் பற்றி இலெனின்' என்ற ஒரு நூலை ஆங்கிலப்படுத்தி மாசுகோ வானவில் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மொழிச் சிக்கலில் விழிபபுணர்வற்ற-தெளிவற்றவர்க்குப் பயன்பட அந் நூலைச் சுருக்கித் தந்துள்ளேன்.
என் எழுத்திலும் வாழ்விலும் அக்கறையும் ஆர்வமும் காட்டிப் பாராட்டுரையும், சிறப்புரையும் தந்த முனைவர் சிலம்பொலிசெல்லப்பனார்க்கும், முனைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சகத் ரட்சகன் அவர்கட்கும் மிக்க நன்றி!
இந் நூல் காலத்தின் தேவை என்று வற் புறுத்திய என் இளைய தோழர் இரா. வேங்கடா சலபதிக்கும், மொழிநூலின் சிக்கறுத்துத் தந்த நயன்மைக் கட்சியின் கலைக் களஞ்சியமாகிய அறிஞர் எ. எசு. வேனு அவர்கட்கும் நன்றி மிகவுடையேன்.
மக்கள் பயன் கொள்க.
தோழன் த. கோவேந்தன்