இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100
ஸ்ால்பிய உஸ்பெகிஸ்தான்்
(13. 1915)
முடிவற்று அலைந்திடும் உள்ளம்
நிலத்துாடும், கடலூடும், வானுாடும் பயணங்கள்
நிகழ்த்து கின்றேன்;
பலவான சிற்றுார்கள், நகரங்கள், நாடெல்லர்ம்
பறந்தும் உள்ளேன்;
நிலவுலகம் பலவண்ணத் திண்டாகப் புதிர்வழியாய்க்
கிடக்கும், எங்கும்
கலத்துறைகள் வாழ்மனைகள், எண்ணங்கள், கனவார்வம்
பொலிந்து நிற்கும்.
எங்கெங்கு நான்செலினும் கனவோடே உடன்கொள்வேன்
பாட்டை, அன்பை .
இங்கிந்த உலகந்தான்் ஒய்வில்லாது இயங்குதல்போல்
இயங்கு கின்றேன். -
கங்குல்துயில் கனவினிலும் என்பயணம் மேன்மேலும்
தொடர்ந்தே செல்லும்,
செங்கதிர்ப்புத் தொளிநோக்கிச் செல்கின்ற நாவாய்என்
படுக்கை ஆகும்.
252