பக்கம்:ரமண மகரிஷி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

27


 பகவான் ரமண மகரிஷியான பின்பு எழுதுகிறார் அதை படியுங்கள்.

“நான் பௌத்தர்களைப் போல துக்கவாதி அல்ல. ஏனென்றால், அதுவரையில் நான் உலக துக்கங்களை நுகர்ந்ததே இல்லை. அப்படியானால் உலகம் துக்கமயமானது என்ற அறிவு எனக்கு எப்படி உண்டாயிற்று?”

“நான் மோட்சம் அடையவும் விரும்பவில்லை; ஏனென்றால், நான் தளைகளின் துன்பங்களை அறியாதவன். என் உள்ளத்தில் ஒருவிதமான விசித்திரமான வேதனை, கிளர்ச்சி முதலியவை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் மூழ்கியதும் எல்லா விதத் தாபங்களும் அடங்கிவிடும்.”

“தியானம் நீங்கி எழுந்ததும், அளவில்லாத தாபம் உண்டாகிவிடும். இந்தத் தாபத்தை என்னால் துக்கம் என்று கூற முடியவில்லை; சுகம் என்றும் சொல்ல முடியவில்லை. அதை எழுத்தாலும், எண்ணத்தாலும் வருணிக்க முடியாது.”

“மீனாட்சி - சுந்தரேஸ்வரரையும், நாயன்மார்களையும் நான் ஆலயத்தில் கண்டதும் என் உள்ளம் துள்ளிக் குதிக்கும்.”

மேற்கண்டவாறு வெங்கட்ராமனுடைய விழிப்பு நிலை இருந்தது. எப்போதும் சிறிது நேரம் தனிமை கிடைத்தால் கூட போதும். உடனே யோகாசனப் பயிற்சியாளரைப் போல ஆசனமிட்டு உட்கார்ந்து, எல்லாவற்றையும் மறந்து தியானத்தில் ஆழ்ந்து விடுவான். எந்த வருத்தமோ, துன்பமோ, கவலையோ அப்போது அவனைத் தீண்டாது.

“அதே நேரத்தில் வீட்டிலும், தமையன் நாகசாமி, உதாவக்கரைகளுக்கு வீட்டிலே வேலை இல்லை, என்று கூறிவிட்டார். அவர் அவ்வாறு சொல்லி விட்டாரே என்பதற்காக நான் அவர் மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/29&oldid=1280167" இலிருந்து மீள்விக்கப்பட்டது