பக்கம்:ரமண மகரிஷி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

43




மதுரையில் இருந்தபோது அவர் கேள்விப்பட்ட அருணாசலம் என்பது, ஒரு மலையின் பெயர் என்று தெரியாது. திருவண்ணாமலை வந்த பிறகுதான் அருணாசலம் என்பது ஒரு ஞானமலை; சிவன்மலை; தவமலை; யோகிகள் மலை; அஞ்ஞானத்தை அழிக்கும் மலை; மெய்ஞானத்தைப் பேணும் மலை; ஆன்ம பலத்தை வளர்க்கும் மலை என்பதை அந்தச் சிறுவன் வெங்கட்ராமன் புரிந்து கொண்டான்.

வெறும் கல்லாலான, சுதையாலான, உலோகங்களாலான வடிவங்களையோ அல்லது மேற்கண்ட சக்திகளைக் கொண்ட மலையையோ-அந்தச் சிறுவன் தனக்கு அருள் பாலிக்கும் பெருமானாக எண்ணவில்லை. அருணாசலம் என்ற சொல்லை, பெயரை என்று அவன் கேள்விப் பட்டானோ, அன்றே அவனது மனத்தில் அந்தச் சொல் பெரியதோர் அருட் தத்துவமாகத் தோன்றிவிட்டது. அந்த திருவருட்சக்திதான், ஆன்ம சக்திதான் வெங்கட்ராமனைத் திருவண்ணாமலைக்கு காந்த சக்திபோல ஈர்த்து, இழுத்து வந்தது. மேற்கண்ட இந்த இறை சக்தி உண்மையைப் பிற்காலத்தில் அவர் பகவான் ரமண மகரிஷியாக உருவெடுத்தபோது தனது வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கீழுரில் வெங்கட்ராமனுடைய கடுக்கண்களை விற்று முத்துசாமி கொடுத்த அந்தப் பணத்தில் ரயில் கட்டணம் போக மீதியிருந்த பணத்தை வெங்கட்ராமன் அங்கே இருந்த ஐயங்குளத்தில் வீசி எறிந்தார். தான் அணிந்திருந்த பார்ப்பனப் பிறப்பு அடையாளமான, உயர்சாதியை உணர்த்தும் சாதிச் சின்னமான பூணுலைப் பார்த்து, பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்ற கேள்வியைத் தனக்குத்தானே மனத்தில் எழுப்பி, அந்தப் பூணுலை அறுத்து அதே குளத்தில் தூக்கி எறிந்தார்.

முத்துசாமி கொடுத்திருந்த அவருடைய வீட்டு முகவரிச் சீட்டையும் கிழித்து வீசினார். அதே நேரத்தில் தான் போட்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/45&oldid=1280711" இலிருந்து மீள்விக்கப்பட்டது