பக்கம்:ரமண மகரிஷி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

ரமண மகரிஷி


 மகிழ்வார்கள். சில சமயங்களில் பல மணி நேரமானாலும் அல்லது சில நாட்களானாலும் அபிஷேகப் பால் வராது. அந்த நேரத்திலே பால யோகியான வெங்கட்ராமன் தியானத்தில் ஆழ்ந்து போவார். அந்த மாதிரியான வேளைகளில் மௌனசாமி வாயைப் பிரித்து பாலை ஊற்றிப் பருக வைப்பார்.

கோயில் பூசாரி, இந்த இரண்டு சாமியார்களின் இணை பிரியா துறவுத் தோழமையைக் கண்ட பின்பு, அவர் இருவர்களுக்கும் சேர்த்தே அபிஷேகப் பாலை அனுப்புவார். நேரத்தில் அந்தப் பால்வாரா நிலையேற்பட்டுப் போனால், அக்கம் பக்கம் உள்ள பக்தியன்பர்கள் அந்த இரு சந்நியாசிகளுக்கும் பால் அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அறுபது நாட்கள் ஓடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/52&oldid=1280737" இலிருந்து மீள்விக்கப்பட்டது