90
ரமண மகரிஷி
“சிலர், நீங்கள் குரு தேவையில்லை என்று கூறியதாகச் சொன்னார்கள். சிலர், இதற்கு நேர்மாறாகத் தாங்கள் கூறியதாகவும் சொன்னார்கள். மகரிஷி இக் கருத்துக்களைப் பற்றிக் கூறுவது என்ன?” என்று அந்தக் கல்வியாளர் நேரில் கேட்டார்.
அந்த வினாவுக்கு மகரிஷி விடையளித்த போது, “குரு தேவையில்லை என்று நான் எப்போதுமே கூறியதில்லை” என்றார்.
அதற்கு அந்த நூல் பல கற்ற கல்வியாளார்; மகான் அரவிந்தரும், மற்றவர்களும் உங்களுக்குக் குருவாக யாருமே இருந்தது கிடையாது என்று கூறுகிறார்களே....” என்ற சந்தேகத்தை ரமணரிடம் எழுப்பியபோது,
“இவை எல்லாம் நீ எதைக் குரு என்று அழைக்கிறாய் என்பதைப் பொறுத்தது. அவர் மனித உருவில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.”
"தத்தாத்தேயருக்கு இருபத்து நான்கு குருக்கள், பஞ்ச பூதங்களும் - நிலம், நீர் அனைத்துமே. இந்த உலகில் உள்ள எல்லாப் பொருள்களுமே அவருக்குக் குருவாக இருந்தன. எனவே, குரு ஒருவர் அவசியம் தேவை. உபநிடதங்கள், குருவால் மட்டுமே ஒரு மனிதனைக் கடவுளிடம் அழைத்துச் செல்ல முடியும் என்று கூறுகின்றன. ஆகையால் ஆன்ம நல்வழிப் பாட்டுக்கு ஓர் ஆன்ம குரு அவசியம் தேவையே என்றார் மகரிஷி.
மகான் கூறியதைக் கேட்டுக் கொண்ட அந்த நூல் வல்லார்; மீண்டும்; “நான் சொல்வது மானிட உருவில் உள்ள குரு ஒருவரை. மகரிஷிக்கு அப்படிப்பட்டவர் யாரும் இல்லையே.”
“ஒரு சமயத்தில் இல்லாது போனாலும், வேறொரு சமயத்தில் நான் பெற்றிருக்கலாம். ஆனால் நான் அருணாசல சுவாமியைப் பற்றிப் பாடவில்லையா?