பக்கம்:ராஜாம்பாள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடுகுடுப்பைக்காரன் 119

பாக்கியாற் சுட்டது குறைந்தது ஐந்து கஜ தூரத்திற்கு அப்பாலிருந்து சுட்டிருக்கவேண்டும். ஆகையால் இரண்டு பேர் செய்ததேயொழிய ஒருவர் செய்த காரியம் அல்ல என்று திட்டமாய்ச் சொல்லலாம்.

துரைசாமி ஐயங்கார்: இப்போது தாங்கள் சோதனை செய்த பெண்ணின் வயது என்ன இருக்கும் என்று தோற்றுகிறது? .

காவன்ன துரை: சுமார் பதினறு வயது இருக்கலாம் என்று எங்களுக்குத் தோற்றுகிறது.

இப்படிக் காவன்ன துரை சொன்னதும் கோர்ட்டாரும். கொக்கு துரையும் மணவாள நாயுடுவும் புன்சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.

கோர்ட்டார், சர்ஜன் பால் துரையையும் கூப்பிட்டு விசாரணை செய்தார்கள். அவரும் காவன்ன துரை சொன் னதுபோலவே சொன்னர். மாஜிஸ்டிரேட்டார் கேசைச் செஷன்ஸ் கோர்ட்டுக்கு விசாரணைக்காக அனுப்புவதாக வும் அதுவரையில் கைதி ஜெயிலில் இருக்கவேண்டும் என்றும் சொன்னர். வக்கீல் துரைசாமி ஐயங்கார் ஜாமீன் பேரில் விடவேண்டும் என்று பல வகையிற் பிரயத் தனஞ் செய்து கேட்டும் நீலமேக சாஸ்திரி ஜாமீன்பேரில் விட ஒப்புக்கொள்ளவில்லை. -

i0. குடுகுடுப்பைக்காரன்

போலீஸ் கோர்ட்டில் விசாரணை முடிந்த மறுநாட் காலையில் குடுகுடுப்பைக்காரன் ஒருவன் லோகசுந்தரியின் வீட்டண்டை காலை ஆறு மணி சுமாருக்குப் போனன்.

குடுகுடுப்பை: பலுகவே, பலுகவே, மன்ச்சி வாக்கு பலுகவே, சேதி வருகுது; சேதி வருகுது; சேதி வருகுது; நல்ல சேதி வரப்போகுது, குடு குடு, குடு குடு, குடு குடு: ஐயோண்ணு போருன்; பாவம்; ஐயோண்ணு போருன்: ரங்கூனில் ஐயோண்ணு சாகப்போருன்; குடு குடு, குடு குடு, குடு குடு. புறப்பட்டு வரணுமுங்குருன்; வரணு முங்குருன்; பாவி விடமாட்டேண்ணு சொல்லுகிருளே. குடு குடு, குடு குடு, குடு குடு ஆசை பிளுக்குதிங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/123&oldid=684665" இலிருந்து மீள்விக்கப்பட்டது