பக்கம்:ராஜாம்பாள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரீ புருஷ சம்பாஷணை 13

நொந்துகொள்வதில் பயன் என்ன? ஊரிலுள்ள பெண்க ளெல்லாம் குழந்தைகளுக்குத் தலை முழுக்காட்டாமலும் திருஷ்டி சுத்தாமலும் நாட்டு வைத்தியனைக் கொண்டு வைத்தியஞ் செய்துகொள்ளாமலுமா இருக்கிரு.ர்கள்? நீங்கள் பூர்வ ஜன்மத்தில் யாரை அடித்தீர்களோ, எவளை இம் சித் தீர்களோ, இன்னும் என்ன என்ன அக்கிர மங்கள் செய்தீர்களோ, அதன் பலன்கள்தாம் இப்போது இப்படி எல்லாம் நடக்கின்றன. இன்னும் இந்த ஜன் மத்தில் என்னே இப்படியெல்லாந் துாற்றுவதற்கு உங் களுக்கு ஆண்டவன் சரியானபடி படியளக்காமல் இருக்க IT L-1-5 6T . -

சாமிநாத சாஸ்திரி: அவசரமாய்ப் பேச வேண்டிய சமாசாரம் இருக்கிறதென்று சொல்வி மறுபடியும் ஒரு மணி நேரம் வீண் வம்பு பேசி நேரத்தைக் கடத்தினப். இப்பொழுதாவது ஏதோ அவசரமாய்ப் பேச வேண்டு மென்கிற சங்கதியைச் சொல்லுகிரு. யா? இல்லையா?

கனகவல்லி: நீங்களே இவ்வளவு நேரம் வீண்வம் புகள் வளர்த்தீர்களல்லாமல் நான் பேசவில்லை. நமக்கு இப் போது இருக்கப்பட்ட அபூர்வ கண்மணியாகிய இராஜாம்பாளுக்கு வயசு பன்னிரண்டு முடிகிறது. நாளைக்கோ, நாளேநின்றாே புஷ்பவதி யாகிவிடுவாள் போல் தோற்றுகிறது. நீங்கள் இன்னும் அவளுக்குக் கல்யாணஞ் செய்ய ஏற்பாடு செய்யாமல் இருக்கிறீர்கள். நான் நான்கு வருஷகாலமாய்க் குழந்தைக்குக் கல்யா ணஞ் செய்துவிடவேண்டுமென்று கட்டாயப் படுத்திக் கொண்டிருந்தும் ஏதோ சமூகசீர்திருத்தக் கழகம் என்னும் சங்கத்தில் நீங்கள் ஒர் அங்கத்தினரென்றும், அப்படி இருப்பதால் சிறுவயதில் கல்யாணஞ் செய்து கொடுக்க மாட்டீர்களென்றும் சொல்லிக்கொண் டிருக்கிறீர்கள். உங்களைப்போல் மேற்படி சங்கத்தில் அங்கத்தினராயிருக் கும் ராமசாமி ஐயரும் சுப்பையரும் அவரவர்களுடைய பெண்களுக்கு ஏழு வயதிலேயே கல்யாணஞ் செய்துவிட வில்லையா? நீங்கள் மாத்திரம் ஏன் இப்படிப் பிடிவாதஞ் செய்துகொண் டிருக்கிறீர்கள்? - -

சாமிநாத சாஸ்திரி: சீர்திருத்தக் கழகத்தில் சேர்ந்த வர்களில் அநேகர் மேற்படி கூட்டங்களில் வந்து பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/17&oldid=677383" இலிருந்து மீள்விக்கப்பட்டது