பக்கம்:ராஜாம்பாள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இராஜாம்பாள்.

உள்ளே போவதற்கு உத்தரவு கேட்டேன். போகக்கூடா தென்று சொன்னர்கள். உடனே இவர்களில் ஒருவன அடித்தால், என்னையும் உள்ளே முடிவிடுவார்களென்ற எண்ணத்துடன் வலியச் சண்டைக்கு இழுத்து ஒருவன அடித்தேன். உனக்கு இவ்வளவு கர்வமா என்று சொல்லி என்னையும் அடைத்துவிட்டார்கள். இதுதான் சமாசாரம். இதோ இந்தச் சீசாவிலிருக்கும் ஜலத்தைக் கொண்டு தாகசாந்தி செய்துகொள்ளும்.

சாமிநாத சாஸ்திரி: என் நிமித்தம் நீர் இவ்வளவு கஷ் டத்திற்குள்ளானிரே! இந்த உபகாரத்தை என் ஆயுள் பரியந்தம் மறக்கமாட்டேன். இந்தப் பாழும் இடத்தி லிருந்து தப்புவது எப்படி? அநியாயமாய் இந்த மணவாள நாயுடு திருட்டுச் சொத்தைக் கொண்டுவந்து வைத்து. இப்படிச் செய்தானே! என்ன காரணமோ, தெரிய வில்லையே? -

ராமண்ணு: நீங்கள் கஷ்டத்திற்குள் அகப்பட்டிருப் பதால் யோசனை பண்ணுமல் மணவாள நாயுடுபேரில் குற் றஞ் சுமத்துகிறீர். சோதனை செய்தபோது நானும் கூடத்தானே இருந்தேன்? உங்கள் வேலே ஆட்களில் எவ ளுவது அந்தக் கொள்ளேயில் சம்பந்தப்பட் டிருக்கவேண் டும். நகைமூட்டை பாயிலிருந்து திண்ணென்று கீழே விழுந்ததே. இப்போது கொஞ்ச நேரத்திற்கு முன்புசுட உங்களுடைய விஷயத்தைக் குறித்து மணவாள நாயுடு எவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டார்! சப் மாஜிஸ்டிரேட் சாஸ்திரிகளுக்குச் சமாசாரம் தெரியாவிட்டால் நீங்கள் இந்த இடத்தைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள்.

சாமிநாத சாஸ்திரி; இந்தச் சப் மாஜிஸ்டிரேட் லஞ் சம் வாங்கப்பட்டவனுயிற்றே! ஐயாயிரம் அல்லது பதின யிரமாவது கொடுத்துத் தொலைக்கிறேன். எப்படியாவது என்னை இந்த இடத்திலிருந்து வெளியேற்றப் பாரும்.

ராமண்ணு: உங்கள் குணம் எனக்குத் தெரியாதோ? நான் இவ்வளவு நேரம் சும்மா இருந்தேனென்று எண் னிக்கொண்டீர்போல் இருக்கிறது. நீங்கள் இந்த இடத் தில் இருக்கிறவரையில் எனக்குத் தூக்கம் பிடிக்குமா? நன் ருய்ச் சொன்னீர். போலீஸ் இன் ஸ்பெக்டரும் நானும் போய்ச் சப் மாஜிஸ்டிரேட்டாரிடம் பேசினுேம். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/54&oldid=677420" இலிருந்து மீள்விக்கப்பட்டது