பக்கம்:ராஜாம்பாள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கோரமான கொலே 77

அவரைக் கல்யாணஞ் செய்துகொள்வதற்காகவும் தங்களே அநியாயமாய் இம்சைப்படுத்திப் பலாத்கார மாய் என்னைக் கல்யாணஞ் செய்துகொள்ள வேண்டு மென்ற எண்ணத்துடன் இருந்தவராகிய நீலமேக சாஸ்திரியை அவமானப்படுத்துவதுடன் அநியாயமாய் லஞ்சம் வாங்கிச் சம்பாத்தியம் செய்துவைத்திருந்த அவருடைய சொத்தை நல்ல வழியிற் செலவழிக்க வேண்டுமென்ற எண்ணத்துடனும், நீலமேக சாஸ்தி ரியைக் கல்யாணஞ் செய்துகொள்வதாக ஒப்புக் கொண்டவள்போல் அபிநயித்து அவரை லட்சக் கணக்கான ஜனங்களுக்குச் சாப்பாடு போடும்படி செய்ததோடு, ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குப் புடைவைகளும் வேஷ்டிகளும் கொடுக்கும்படி செய் தேன். தாங்கள் என் பேருக்கு உயில் எழுதிவைத் திருக்குஞ் சொத்துத் தமக்குச் சேருமென்ற எண் ணத்துடன் அவர் சம்பாத்தியஞ்செய்த சொத்துப் பூராவையும் கல்யாணத்தில் செலவழித்தார். தங்களை அவர் இம்சைப்படுத்தியதற்கு நான் ஆண்பிள்ளையா யிருந்தால் அவரைக் குதிரைச் சவுக்கால் அடித் திருப்பேன். பெண்பிள்ளையானதுபற்றி அவருடைய பொருள் செலவாகும்படி செய்ததன்றி அவரை அவ மானப்படும்படியும் செய்ததுதான் என்னுவாகிய காரியம். தாங்கள் கொடுத்த வாக்குக்கு இடையூறு வந்ததென்று தாங்கள் நினைக்கவேண்டாம். ஏனென் ருல், தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நீல மேக சாஸ்திரிக்குக் கல்யாணஞ் செய்யத் தாங்கள் ஏற்பாடு செய்தீர்கள். நான் அவரைக் கல்யாணஞ் செய்துகொள்ளாமல் ஒடிப்போளுல் அது தங்க ளுடைய தப்பல்ல. இப்படி மோசஞ் செய்துவிட்டு ஒடிப்போனதற்குத் தாங்கள் கட்டாயமாய் என்ன மன்னிக்கக் கோருகிறேன். எனக்குப் புத்தி தெரிந் தது முதல் தங்களைவிட்டு ஒரு நாளாவது பிரிந்திருந்த வளல்லவாதலால் இன்று தங்களை விட்டுப் போவது அதிக வருத்தத்தைக் கொடுத்தபோதிலும், அப்படித் தங்களே விட்டுப் போகவேண்டியது அத்தி யாவசியமாகையால் தாங்கள் என்னை மன்னிப்பீர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/81&oldid=684623" இலிருந்து மீள்விக்கப்பட்டது