பக்கம்:ராஜாம்பாள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இராஜாம்பாள்

மயமாகவே இருந்தது. சுவர்கள் பூராவும் நாளுவித வர்ணமுள்ள செமன்டுப் பாளங்கள் அழுத்தியிருந்ததால் கைவைத்தால் நழுவி விழும்படி அவ்வளவு வழவழப்பாய். இருந்தன. சுவர்களிலெல்லாம் மிகவும் விலையுயர்ந்த சட்டங்களால் அலங்கரித்த நிர்வாணப் படங்கள் தொங்க விட்டிருந்தன. இரண்டு நிலைக்கண்ணுடிகளுக்கு மத்தியி லுள்ள சப்ர மஞ்சத்தின்மீது துணியால் மூடப்பட்ட உடம்போ அல்லது நிர்வாணமாகிய உடம்போ என்று சந்தேகிக்கும்படியாக, பட்டுச்சல்லாவைக் கட்டிக்கொண்டு வெல்வெட் தலையணைமேல் முழங்கை வைத்து, பாதாதி கேசபரியந்தம் தொங்கும் கூந்தலை அவிழ்த்துவிட்டிருக்கும் தலையை அந்தக் கையின்மேல் வைத்துக்கொண்டு இவள் இவ்வுலக மாதோ அல்லது மேனகை, ரம்பை என்ற தேவ லோகத்து மாதர்கள் இருக்கிறார்களென்று சொல்லுகிறார் களே, அவர்களில் ஒருத்தியோ என்று அவளை அறியாதார் சந்தேகிக்கும்படி அவ்வளவு ஒய்யாரமாய் லோகசுந்தf படுத்துக் கொண் டிருந்தாள்.

நான் இந்த விவரங்களைத் தங்களிடஞ் சொல்வதற்கு இவ்வளவு நேரமாயிற்றே தவிர உள்ளே போய்ப் பார்த் ததும் வெளியே வந்துவிட்டேன். நான் நடந்த சத்தம் கேட்டோ திடீரென்றுதானே அவள் எழுந்தாளென்பது எனக்குத் தெரியாது. நான் அந்த வாசலை விட்டு எப்போதும் உட்கார்ந்து பேசும் அறைக்கு வருவதற்குள் ஓடிவந்து என் கையைப் பிடித்துக்கொண்டு, கோபாலா! என்ன, அந்நியனைப்போல் ஒடிப்போகிருயே! இதுவரையில் நாம் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு அந்நியோந்நியமாக இருந்தோமென்பதையும், வித்தியாசமில்லாமல் இருந்தோ மென்பதையுஞ் சற்றுங் கவனியாமல் பிசாசைக் கண்டவன் ஒடுவதுபோல் ஒடுகிருயே! இதுவரையில் நீ என் படுக்கையறையைப் பார்த்ததில்லையே? வா! அவ் விடத்திலுள்ள விசித்திரமான படங்களையும் அபூர்வமான வஸ்துக்களையும் காண்பிக்கிறேன்’ என்றாள்.

அதுவரையில், வாஸ்தவமாக அயர்ந்து நித்திரை செய்துகொண் டிருந்தாளென்றிருந்த எனது எண்ணம் சற்று மாறி அவளிடத்தில் ஒருவிதமான வெறுப்பு எனக்கு ஏற்பட்டது. லோகசுந்தரியின் பு ரு ஷ ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/96&oldid=684638" இலிருந்து மீள்விக்கப்பட்டது